அனுகூலமடைய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரைப் பார்த்து செபம்.

கன்னியர்களின் தந்தையும், பரிபாலனுமாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! பிரமாணிக்கமுள்ள காவலனே! பரிசுத்தமயமாகிய இயேசுவையும், கன்னியருக்கு அரசியாகிய அர்ச்சியசிஷ்ட மரியாயையும் சர்வேசுரன் உமது அடைக்கலத்தில் ஒப்படைத்தாரே. உமது அருமைப் பராமரிப்புக்கு மிகவும் உரியவர்களாயிருக்கிற இந்த இருவரைக்குறித்து நான் இரந்து கேட்கும் மன்றாட்டு ஏதென்றால்...

வேண்டியதைக் குறிப்பிடுக.

நான் மாசற்ற சிந்தனைகளோடும், பரிசுத்த இருதயத்தோடும், கற்புள்ள சரீரத்தோடும், உத்தம தேவ சிநேகத்தோடும் பழுதின்றி நடந்து, அத்திவ்விய இயேசுவுக்கும், தேவமாதாவுக்கும் இடைவிடாமல் ஊழியம் பண்ணும்படிக்கு, எனக்கு வேண்டிய வரப்பிரசாதத்தைக் கேட்டுத் தந்தருளும்.

ஆமென்.