இறைவா உன் திருமுன்னே எம் இதயம் தந்தோம் ஏற்பாயே ***

இறைவா உன் திருமுன்னே எம் இதயம் தந்தோம் ஏற்பாயே
தாமரை மலராகத் தாள்களில் வைத்து மகிழ்வோமே

1. இயேசுவின் உருவிலே யாம்
இணைந்தே எம்மைத் தருகின்றோம்
பலியாகும் எம் வாழ்வினைப்
பணியாய் மாற்றிடக் கோருகின்றோம்

2. உணவிதன் உருவிலே எம்
உயிரைத் தந்தோம் இறைவனே
உம்மை எங்கள் உருவிலே
உவந்து அளிப்பீர் உலகிலே