இந்த பூவிலே ஒரு காலத்தில்

இந்த பூவிலே ஒரு காலத்தில்
தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
சொல்லொணாததாய் புயலும் வீச
காணுணாததாய் இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா

1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார்
பிழைப்போமேல் உமக்காய்
ஒரு கோவிலைச் செய்வோமென்றார்
மாதாவாம் மேரியின் உன்னத அருளால்
கரை சேர்ந்திட நொடியில் கண்டார்

2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை
கண்டு வணங்கினர் தாம்
மேலும் நன்றி நவின்றனர் தாம்
மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை
அவராலயமாகப் பணிந்தார்