இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா

இதயம் மகிழுதம்மா துயர் கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா - உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா

1. தாயெனும் போதினிலே - மனம்
தானுனைத் தேடுதம்மா
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா

2. அன்னை உன் அன்பினிலே - என்றும்
அடைக்கலம் தாருமம்மா
நாளும் பொழுதும் உந்தன் நாமம்
பாடிப் புகழ்ந்திடுவேன் அம்மா

3. வாழ்வெனும் பாதையிலே - ஒளி
விளக்காய் நீ இருப்பாய்
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து புகழ்ந்திடுவேன் அம்மா