ஃபெப்ரவரி 1 - அயர்லாந்து புனிதர் பிரிஜிட் ***


அயர்லாந்து புனிதர் பிரிஜிட்

(St. Brigid of Ireland)

கன்னியர், பெண் துறவியர் மடாதிபதி, ஊக்கமளிப்பவர்:

(Virgin, Abbess, Inspirer)

பிறப்பு: கி.பி. 453

ஃபௌகார்ட், டுண்டால்க், அயர்லாந்து

(Faughart, Dundalk, Ireland)

இறப்பு: ஃபிப்ரவரி 524 (வயது சுமார் 70)

கில்டேர், அயர்லாந்து

(Kildare, Ireland)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

நினைவுத் திருவிழா: ஃபெப்ரவரி 1

பாதுகாவல்:

குழந்தைகள், கொல்லன், படகோட்டிகள், குடிபான உற்பத்தியாளர், கால்நடைகள், கோழி வளர்ப்போர், திருமணம் செய்யாத பெற்றோரின் குழந்தைகள், தவறான தந்தைக்கு பிறந்த குழந்தைகள், தவறான சமூகத்தில் பிறந்த குழந்தைகள், பால் பண்ணை வேலைக்காரிகள், பால் பண்ணை தொழிலாளர்கள், தப்பியோடியவர்கள், கைக்குழந்தைகள், அயர்லாந்து, கப்பற்படை வீரர்கள், தாதிகள், துறவிகள், கவிஞர்கள், ஏழை, கோழி விவசாயிகள், அச்சகங்களின் பணியாளர்கள், மாலுமிகள், அறிஞர்கள், பயணிகள்

அயர்லாந்து புனிதர் பிரிஜிட், அயர்லாந்தின் பாதுகாவலர்களுள் ஒருவர் ஆவார். புனிதர் பேட்ரிக் (St. Patrick) மற்றும் புனிதர் கொலம்பியா (St. Columba) ஆகியோரும் அயர்லாந்தின் புனிதர்கள் ஆவர். புனிதர்களைப் பற்றிய சரித்திரங்களை எழுதும் ஐரிஷ் அமைப்பு, (Irish Hagiography) இவரை ஆதி கிறிஸ்தவ துறவி என்றும், பெண் துறவியர் மடாதிபதி என்றும், பல்வேறு பெண் துறவியர்க்கான மடங்களை நிறுவியவர் என்றும், பிரபலமாக மதிக்கப்படும் "அயர்லாந்தின் கில்டேர்" (Kildare in Ireland) துறவு மடம் உள்ளிட்ட பல்வேறு பெண் துறவியர் மடங்களை நிறுவியவர் என்றும் கூறுகிறது.

பிரிஜிட் நிஜமாகவே ஒரு மனிதர்தானா என்ற விவாதமும் உண்டு. பிரிஜிட் எனும் "செல்டிக்" பெண் தெய்வத்துக்கும் (Celtic Goddess Brigid) இவருக்குமுள்ள பெயர், நினைவுத் திருநாள் தினம், இயற்கை நிகழ்வுகள், புனைவுகள் மற்றும் அவரது தொடர்புடைய நாட்டுப்புறப் பண்பாடுகள் ஆகியன இருவரும் ஒருவர்தானா என்ற விவாதத்தை எப்போதுமே முன்னிறுத்துகின்றன.

இவர், வெறுமனே கிறிஸ்தவமயமாக்கலின் பெண் தெய்வம் ஆவார் என்றும் சில அறிஞர்கள் சொல்கிறார்கள். வேறு சில அறிஞர்களோ, அவர் செல்டிக் பெண் தெய்வத்தின் பண்புகளைக் கொண்ட சாதாரண பெண்தான் என்றும் கூறுகின்றனர்.

பிரிஜிட், கி.பி. 451ம் ஆண்டு, அயர்லாந்தில் (Ireland) உள்ள “டுண்டால்க்” (Dundalk) எனுமிடத்தின் வடக்கேயுள்ள “ஃபௌகார்ட்” (Faughart) எனும் இடத்தில் பிறந்தவர் ஆவார். அவரது வாழ்க்கையின் நம்பகத்தன்மையைப் பற்றின ஏற்கனவே இருந்த பழம்பெரும் தரமான மாறுபட்ட மற்றும் முரண்பாடு கொண்ட வரலாறு காரணமாக மதச் சார்பற்ற மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களிடையே எப்போதுமே விவாதங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.

இவரது மூன்று வாழ்க்கை வரலாறுகள், இவரது தாயார் பெயர் "ப்ரோக்கா" (Brocca) என்றும் ஒரு அடிமை என்றும் ஒரு கிறிஸ்தவ 'பிக்ட்' (Christian Pict) (ரோமானிய காலங்களில் வடக்கு ஸ்காட்லாந்தின் கைக்கொள்ளும் ஒரு பண்டைய மக்கள் ஒரு உறுப்பினரை "பிக்ட்" என்பர்) என்றும் புனித பேட்ரிக் (Saint Patrick) அவர்களால் திருமுழுக்கு பெற்றவர் என்றும் கூறுகின்றன. அதே வரலாறுகள், பிரிஜிட்டின் தந்தை பெயர் "டுப்தாச்" (Dubhthach) என்றும் அயர்லாந்தின் தென்கிழக்கு பிராந்தியமான "லேய்ன்ஸ்ட்டர்" (Leinster) பகுதியின் தலைவராக இருந்தவர் என்றும் கூறுகின்றன.

அடிமையான "ப்ரோக்கா" கர்ப்பமானபோது, அவரை ஒரு பாதிரியிடம் விற்று விடுமாறு, "டுப்தாச்சின்" (Dubhthach) மனைவி அவரை வற்புறுத்தியதாக சரித்திரம் கூறுகிறது. இதனால், பிரிஜிட் தாமே ஒரு அடிமைத்தளையிலேயே பிறந்தார். ஆரம்பத்திலிருந்தே பிரிஜிட் பரிசுத்தமானவராக இருந்தார். அவரை வாங்கிய பாதிரி அவருக்கு உணவு கொடுக்க முயலும்போதெல்லாம் அவர் பாதிரியின் அசுத்தம் காரணமாக வாந்தி எடுத்தார் என்பர். ஆனால், அப்போதெல்லாம் செந்நிற காதுகளைக் கொண்ட ஒரு வெண்ணிற பசு வந்து அதிசயமாக அவரை இரட்சித்தது என்பர். அவர் வளர்கையிலேயே பல அதிசயங்களை நிகழ்த்தினார். நோயுற்றோரின் நோய் நீக்கினார். ஏழைகளுக்கு உணவிட்டார். ஒருமுறை, தமது தாய் வைத்திருந்த வெண்ணெய் முழுதும் எடுத்து அவர் ஏழைகளுக்கு கொடுத்தார். ஆனால், அவரது செபத்தின் பயனாக, காலி செய்யப்பட்ட வெண்ணெய் மீண்டும் நிரப்பப்பட்டதாக கூறுகிறார்கள்.

பத்து வயதான பிரிஜிட், ஒரு வீட்டு வேலைக்கார பெண்ணாக தமது தந்தையின் வீட்டுக்கே சென்றார். அவரது தாராள தொண்டுள்ளமானது, இல்லையென்று கேட்பவர்களுக்கு தனது தந்தையின் பொருட்களை வழங்கினார்.

இரட்டை வாழ்க்கை வாழ்ந்த "டுப்தாச்" (Dubhthach) பிரிஜிட்டின் செயல்களால் கோபமுற்றார். அவரை “லெய்ன்ஸ்டர்” (King of Leinster) அரசனிடம் விற்பதற்காக ஒரு வண்டியில் அழைத்துச் சென்றார். அவர் அரசனுடன் பேசிக்கொண்டிருந்த வேளையில், தமது தந்தையின் பொற்பிடியிட்ட வாளை எடுத்து, ஒரு பிச்சைக்காரனிடம் கொடுத்து அதை அவனது குடும்பத்தின் உணவுக்காக மாற்றிக்கொள்ள சொன்னார். அவரது புனிதத் தன்மையை கண்டுகொண்ட அரசன், அவரை விடுவிக்குமாறு அவரது தந்தையை அறிவுறுத்தினார்.

சுமார் 480ம் ஆண்டு, பிரிஜிட் தமது ஏழு உதவியாளர் பெண்களுடன் இணைந்து கில்டேர் நகரில் ஒரு துறவு மடத்தினை நிறுவினார். அது, அங்கே அவர்களால் ஒரு நித்திய சுடர் எரிய காரணமானது. அயர்லாந்து பெண்களுக்கு ஒரு சமூக - மத வாழ்வினை பிரதிஷ்டை செய்தார். அவர் ஆண்களுக்கான ஒரு துறவு மடமும், பெண்களுக்கான ஒரு துறவு மடமும் நிறுவினார். பிரிஜிட்டின் சிறு வாக்குவன்மை, கில்டேர் நகரை ஒரு ஆன்மிகம் மற்றும் கற்பதற்கான ஒரு மையமாக மாற்றியது. அத்துடன் ஒரு ஆலயங்களின் நகராக உருவெடுத்தது. அவர், உலோக வேலைகள் மற்றும் ஒளியமைக்கும் பணிகள் உள்ளிட்ட கலைப் பள்ளியொன்றையும் நிறுவி நடத்தினார்.

ஏழாம் நூற்றாண்டி வாழ்ந்த பண்டைய அயர்லாந்தின் “அர்ட்ப்ரக்கன்” மறைமாவட்ட (Bishop of Ardbraccan) ஆயரும், மடாதிபதியும், ஐரிஷ் புனிதருமான “உல்ட்டான்” (St. Ultan of Ardbraccan) பிரிஜிட்டின் சரிதத்தை எழுதுகையில், பிரிஜிட் மிகவும் விரும்பிய அவரது மாணவியும், அவருக்குப் பிறகு அவரது மடத்திற்கு மடாதிபதியான “டர் லுக்டச்” (Dar Lugdach) ஒரு இளைஞனுடன் காதலில் விழுந்தாராம். அவ்விளைஞனை இரவில் சந்திக்க விரும்பிய அவர், பிரிஜிட்டுடன் ஒன்றாக படுத்திருந்த படுக்கையில் இருந்து எழுந்தே வெளியே சென்றார். எனினும், தமது ஆவிக்குரிய ஆபத்தை உணர்ந்த அவர், வழிநடத்துதலுக்காக பிரார்த்தனை செய்தார். பின்னர் அவளது காலணிகளில் நீரு பூத்த நெருப்பு வைத்து, அதனை அணிந்துகொண்டார். அவள் வைத்த தீயை அவளே அணைத்தாள். வலியே அவளது வலியை அணைத்தது. பின்னர் அவள் படுக்கைக்கு திரும்பினாள். உறங்குவது போலிருந்த பிரிஜிட், “டர் லுக்டச்” (Dar Lugdach) படுக்கையை விட்டு எழுந்து சென்றதை அறிந்திருந்தார். மறுநாள், தமக்கு நேர்ந்ததை பிரிஜிட்டிடம் “டர் லுக்டச்” கூறினார். ஆசைகளால் ஏற்பட்ட உணர்ச்சித் தீயிலிருந்தும், பின்னால் ஏற்படவிருந்த நரகத் தீயிலிருந்தும் தப்பிவிட்டதாக கூறிய பிரிஜிட், தமது மாணவியின் கால்களிலிருந்த புண்களை குணப்படுத்தினார். இதனால் தமது ஆசிரியை மீது மிக உயர்ந்த அன்பு கொண்ட மாணவி, பிரிஜிட் மரண படுக்கையில் இருந்தபோது, தாமும் அவருடன் மரிக்க விரும்புவதாக கூறினார். இதனை தடுத்த பிரிஜிட், இப்போதல்ல, ஆனால் என்னுடைய மரணத்தின் ஆண்டு நிறைவின்போது அது நிறைவேறும் என்றார்.

பிரிஜிட் மரண படுக்கையில் இருந்தபோது, அவருக்கு இறுதி திருவருட்சாதனங்களை புனிதர் “நின்னித்” (St Ninnidh) அளித்தார். அதன் பின்னர், அவருக்கு அவருக்கு இறுதி திருவருட்சாதனங்களளித்த தமது வலது கரம் மாசு படலாகாது எனும் காரணத்தால் தமது வலது கரத்தை உலோக உரையால் மூடிக்கொண்டார். இதனால் அவர், “சுத்தமான கரங்களின் நிம்மித்” (Ninnidh of the Clean Hand) என்றழைக்கப்பட்டார்.

கி.பி. 525ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், முதல் தேதியன்று பிரிஜிட் மரித்ததாக மரபுகள் கூறுகின்றன. அவருக்குப் பிறகு, அவரது மாணவியான “டர் லுக்டச்” அவரது மடத்துக்கு தலைவரானார். பிரிஜிட் கி.பி. 521ம் ஆண்டு மரித்ததாகவும், அவர் கணித்ததுபோலவே அவரது மாணவியான “டர் லுக்டச்” கி.பி. 522ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம் முதல் நாள் மரித்ததாகவும் கத்தோலிக்க திருச்சபை கூறுகிறது.