ஆசை நன்மை உட்கொண்டபின் ஜெபம்

ஆசை நன்மை ஜெபம்

என் சேசுவே!  தேவரீர் மெய்யாகவே நற்கருணையில் இருக்கிறீரென்று நான் விசுவசிக்கிறேன்.  எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை நான் நேசிக்கிறேன். என் ஆத்துமத்திலே உம்மைக் கொண்டிருக்க நான் மிகவும் ஆசிக்கிறேன்.  இப்பொழுது நான் தேவதிரவிய அனுமானத்தின் வழியாக உம்மை உட்கொள்ள முடியாமலிருப்பதால், என் ஆண்டவரே! ஞான விதமாய் என் இருதயத்தில் எழுந்தருளி வாரும்... ஆண்டவரே! நீர் என்னுள்ளத்தில் வந்திருக்கிறீர் என்று நான் நம்புகிறேன்.  என்னை முழுவதும் உம்முடன் ஒன்றிக்கிறேன்.  என்னை உம்மை விட்டு ஒருபோதும் பிரிய விடாதேயும் சேசுவே!  ஆமென்.

நமதாண்டவராகிய சேசுவின் சரீரமும் இரத்தமும் என் ஆத்துமத்தை நித்திய சீவியத்துக்குக் காப்பாற்றுவதாக. ஆமென். (மூன்று தடவை).

நன்றியறிதல் ஜெபம்

அர்ச். கன்னிமரியாயே!  சகல சம்மனசுக்களே, அர்ச்சியசிஷ்டவர்களே!  சுவாமி எனக்குச் செய்த உபகாரத்தின் பெருமை எத்தனை என்று உங்களுக்கு நன்றாய்த் தெரியும் என்கிறதினாலே அவருக்குத் தோத்திரம் செய்ய உங்களை மன்றாடுகிறேன்.  மட்டில்லாத சிநேகத்திற்கும் அளவில்லாத தோத்திரத்திற்கும் பாத்திரமாயிருக்கிற சர்வேசுரா! உமக்கே சதாகாலத்திற்கும் புகழ்ச்சியும் வாழ்த்துதலும் உண்டாகக் கடவது.

ஆமென்.