வாந்தி பேதிக்குத் தப்பித்துக் கொள்ளத்தக்க ஜெபம்

ஓ சேசுவே!  திவ்விய மீட்பரே! எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் இரக்கமாயிரும். ஆமென்.

ஓ வல்லபக் கடவுளே! ஓ பரம தேவனே, நித்தியரான சர்வேசுரா! எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர் பேரிலும் தயவாயிரும். ஆமென்.

என் சேசுவே! எங்களுக்குப் பொறுத்தலும், இரக்கமும் அளித்து, இந்த ஆபத்தான காலத்தில் உமது விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை எங்கள் பேரில் தெளித்தருளும். ஆமென்.

நித்திய பிதாவே! உமது ஏக குமாரனாகிய சேசுக்கிறீஸ்துவின் திரு இரத்தத்தைப் பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிற எங்கள் பேரில் இரக்கமாயிரும். 

ஆமென்.