கிறிஸ்துவின் ஜனன திருநாளன்று சொல்லும் செபம்.

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உமது ஒரே பேறான குமாரனைத் தந்தருளி அவர் எங்கள் தன்மையைத் தரித்துக் கொள்ளவும், கற்புள்ள கன்னி மரியாயிடத்தில் பிறக்கவும் தயைசெய்தீரே! மறு ஜெனனம் அடைந்து புத்திர சுவிகாரத்தினாலும் கிருபையினாலும் உமக்குப் பிள்ளைகளான நாங்கள் உமது பரிசுத்த ஆவியினாலே தினம் தினம் புதுப்பிக்கப்படக் கிருபை செய்தருளும்.

ஒரு நட்சத்திரத்தினாலே புறச்சாதியாரை வழி நடத்தி, அவர்களுக்கு உம்முடைய ஒரே பேறான குமாரனை வெளிப்படுத்தினதுபோல, இம்மையில் விசுவாசத்தினால் உம்மை அறிந்திருக்கிற நாங்களும், மறுமையில் உமது தேவ தத்துவத்தைத் தரிசிக்கும் ஆனந்தத்தை அனுபவிக்கும்படி, உம்மோடும் பரிசுத்தாவியோடும் எப்பொழுதும் ஒரே கடவுளாகச் சதாகாலமும் சீவித்து அரசாளுகிற எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிமித்தம் கிருபை செய்தருளும்.

ஆமென்.