17. இயேசு பசாசைத் துரத்தியதின் பேரில்

திருமொழி பகரும் வல்ல, தேவனே சுவிசேஷத்தை. 
அருளியே உமது வாக்கால், அற்புதமாகவேயோர் 
உருவெனும் அலகை தன்னை, ஓட அற்புதமே செய்த 
இருதய தாட்சியான இயேசுவே அருள் செய்வீரே.