அனுதின நிந்தைப் பரிகார செபம்:


இயேசுவின் திவ்விய இருதயமே! உமது அன்பின் திருவருட்சாதனமாகிய ஆராதனைக்குரிய சற்பிரசாதத்தில் விசேஷமாய் தேவரீருக்குச் செய்யப்படுகிற நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக என்னை முழுதும் தேவரீருக்கு வசீகரமாக்கி, இன்று என் சிந்தனை, சொல், செயல்களையும், என் இன்ப துன்பங்களையும் எல்லாம் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். இனி எல்லாவற்றையும் பார்க்கத் தேவரீரை மாத்திரம் நான் சிநேகிக்கவும் இவ்விதமாய் தேவரீருக்கு ஆறுதல் வருவிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி.

ஆமென்.