சுப மங்கள மாதா பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மகிமை தங்கிய புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனின் மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச்சிஷ்ட மாதாவே   எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறிஸ்துவினுடைய மாதாவே  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியரில் உத்தம கன்னிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அழகோவியமாய் வீற்றிருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பொன்னிறமாய்க் காட்சி தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மங்காத பேரொளியாய் பொற்பை (பொத்தக்காலன்விளை ) நகரில் குடியிருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அமைதியின் ஊற்றாய் அமைந்திருக்கும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மோட்ச அலங்காரியாகிய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாசில்லாமல் உற்பவித்த திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களைத் திடப்படுத்தும் வல்லமையுடைய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தீமைகள் எல்லாம் அகற்றும் ஆற்றலுடைய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்தர்களின் மனதை மகிழச் செய்யும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அற்புதம் புரியும் வல்லவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் இதயங்களைக் கவரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்ப்பத்தின் தலை மிதித்த சக்தியுடையவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் வறுமையை ஒழிக்கும் கொடைவள்ளலாகிய திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் இதயத்தின் இருளை ஓட்டும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்கு உதவிட என்றும் விரைந்து வரும்  திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருமண வரம் வேண்டுவோருக்கு திருமண வரம் தருபவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரியென்னும் தயை நிறைந்த நாமத்தைப் பெற்ற திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிறப்போடு பொற்பை நகரில் வீற்றிருக்கும்  திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குழந்தை செல்வம் வேண்டுவோருக்கு குழந்தை வரம் கொடுப்பவரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நோயுற்றோரின் துன்பத்தை அகற்றி நலமருளும்  திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தீய ஆவியின் கட்டுகளில் இருந்து விடுதலை தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அண்டி வருவோரை நல்வழி நடத்தும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்பினோரை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விண்ணகத்தின் ரோஜா மலரான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தங்கத் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாவீது ராஜா புத்திரியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வாக்குத்தத்தத்தின் பெட்டகமான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞானம் நிறைந்த பொக்கிஷமான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வானுலக தாரகையான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருச்செபமாலையின் தாயான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மோட்சத்தின் வழியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் சமாதான அரசியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இந்திய தேசத்தின் காவலியான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அருள்தரும் இமயமான திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக.

விண்ணகத் தந்தையே, புனித மரியாளை எல்லா அருட்கொடைகளாலும் அலங்கரித்து உமது திருமகனைப் பெற்றெடுக்கும் தாயாகத் தெரிந்து கொண்டீரே . அந்த உத்தமத்தாயின் வழியாக நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களைப் பெற்று , தூய்மையின் வழி நடந்து விண்ணகப் பேரின்பத்தைப் பெற்றுக் கொள்ள அருள் கூர்ந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.