ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமாய் அன்போடு எனைக் காத்து

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமாய்

அன்போடு எனைக் காத்து

என்னோடு இருந்து என்னை வழிநடத்தும்

இறைவா உமக்கு நன்றி


1. ஒரு புன்னகை புரியும் குழந்தையை நினைத்தால்

கவலைகள் மறக்குதய்யா

பல கவிதைகள் பிறக்குதய்யா - எந்த

சின்ன செயலிலும் ஈடுபட்டுழைத்தால்

மனதிற்கு மகிழ்ச்சியய்யா

இறையரசங்கே மலருதய்யா

வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவினிலும்

வழிநடத்த வேண்டும் இயேசய்யா


2. உந்தன் திருவாய் மலர்ந்து அருளிய வார்த்தைகள்

நெஞ்சத்தில் நிறைந்ததய்யா

என்னில் நிம்மதி பிறக்குதய்யா - உந்தன்

திருமுக ஒளியில் என் மனக் காயங்கள்

யாவும் மறைந்ததய்யா

என்னால் மன்னிக்க முடியுதய்யா

உனதெழில் சாயலை மனிதர்களில்

தினம் நான் பார்ப்பேன் இயேசய்யா