எழுவீர் இறைவா ஏழையின் உள்ளமே எழிலே வாழ்வில் தருவீர் வளமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எழுவீர் இறைவா ஏழையின் உள்ளமே

எழிலே வாழ்வில் தருவீர் வளமே


1. பாலை நிலத்தில் பசித்த முன்னோர்

புசிக்கும் உணவாய் அளித்தீர் மன்னா

பாரில் வாடும் மாந்தர் நாடும் பரம உணவே வா


2. வாழ்வும் வழியும் நீரே என்றீர்

வானோர் அமுதம் எமக்கு ஈந்தீர்

பாறை பிளந்தே பானம் அளித்த ஜீவிய சுனையே வா


3. பேழையில் உறைந்த ஏழையின் விருந்தே

வேளையில் உதவும் தெய்வீக மருந்தே

பனிமலை உருக்கும் பகலவன் போல

பாவத்தை போக்கிட வா


4. கவலை மிகுந்தே கண்ணீர் வடித்தேன்

கருணை முகிலே கைவிடலாமோ

அன்பின் ஊற்றே அருளின் உருவே

இருளை அகற்றிட வா