தேடும் அன்பு தெய்வம் என்னைத் தேடி வந்த நேரம் கோடி நன்மை கூடும் புவி வாழும் நிலைகள் மாறும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேடும் அன்பு தெய்வம் என்னைத் தேடி வந்த நேரம்

கோடி நன்மை கூடும் புவி வாழும் நிலைகள் மாறும்

இந்த வானதேவன் தந்த வாழ்வுப்பாதை

எந்தன் வாழும் காலம் போதும்


1. வார்த்தையாகி நின்ற இறைவன் - இந்த

வாழ்வைத் தேர்ந்த தலைவன்

பாரில் எங்கும் புதுப்பார்வை தந்து - அந்தப்

பாதையில் அழைத்த அறிஞன்

காலம் கடந்த கலைஞன் என் தலைவன்


2. அடிமை அமைப்பு இங்கு ஒழிய - எங்கும்

மனித மாண்பு நிறைய

புரட்சிக் குரல் கொடுத்து புதிய வழி வகுத்து

புதுமை செய்த பெரும் புனிதன்

வாழ்வைக் கடந்த இறைவன் என் தலைவன்