என் ஆன்மாவின் ஆனந்தமே உன் சேயாய் என் தாயாய் நான் வாழுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் ஆன்மாவின் ஆனந்தமே

உன் சேயாய் என் தாயாய் நான் வாழுவேன்

ஆன்மாவின் ஆனந்தமே அழியாத பேரின்பமே

உன் சேயாய் நானும் என் தாயாய் நீயும்

வாழ்ந்தாலே தெய்வீகமே


1. நெஞ்சினிலே நிதம் வைத்தீர் சிந்தையிலே உருப்பதித்தீர்

உன் அன்பில் எனை மறந்தேனே

ஆறாத காயங்களில் தீராத துன்பங்களில்

உன் வார்த்தையால் குணம் தந்தீரே

என்னுயிர் நண்பன் விழியினிலே

கண்மணி நான் கலங்கிடுவேனா(னோ)


2. உன் தோளில் எனைச் சுமந்து உன் அன்பில் நிதம்

நனைத்துக் கலங்காதே என மொழிந்தீரே ஆ

நலனின்றிப் போய்விடினும் நம்பிக்கை சாய்ந்திடினும்

என்னருகில் நீர் இருப்பீரே

என்னுயிர் நண்பன் விழியினிலே

எது வரினும் துணிந்திருப்பேனே