முத்தமிழ் தலைவன் மூவொரு இறைவன் எழுந்து வருகின்றார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


முத்தமிழ் தலைவன் மூவொரு இறைவன் எழுந்து வருகின்றார்

என் நெஞ்சத்தில் நிறைந்து சிந்தையில் கனிந்து

இனிமை பொழிகின்றார் என் இறைவன் வருகின்றார்


1. பாவத்தின் பிடியில் தவித்திடும் நிலையில்

பாவியைத் தேடிவந்தார் - தன்

உடலையே அளித்து விடுதலை அளித்து

உயிராய் மாறுகின்றார்

எல்லையில்லாத அன்பினைப் பொழிந்து

என்னைக் காக்கின்றார் என் இறைவன் வருகின்றார்


2. வாழ்வினை இழந்து வாடியே உலர்ந்த

உள்ளத்தில் உறைகின்றார் - அங்கு

வறட்சியை நீக்கி வளமையை ஈந்து

வாழ்வாய் மாறுகின்றார்

எண்ணில்லாத அருளினால் என்றும்

என்னை ஆளுகின்றார் என் இறைவன் வருகின்றார்