பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதிமனமே இன்னும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பெத்தலையில் பிறந்தவரைப்

போற்றித் துதிமனமே இன்னும்


1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு

தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்

குளிரும் பனியும் கொட்டிலிலே கோமகனும் தொட்டிலிலே

ஆரியீரோ ஆரியீரோ ஆரிராரோ

ஆராரோ ஆராரோ ஆரிராரோ தூங்கு தூங்கு பாலா நீ


2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் - இங்கு

பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்


3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு

மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே


4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு

ஆக்களுட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்


5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்

எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே