உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை அரவணைத்திடு இறைவா அந்த இருளிலும் ஒளி சுடரும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை

அரவணைத்திடு இறைவா

அந்த இருளிலும் ஒளி சுடரும் - வெண்

தணலிலும் மனம் குளிரும் - உந்தன்

கண்களின் இமைபோல் எந்நாளும் என்னைக்

காத்திடு என் இறைவா


1. பாவங்கள் சுமையாய் இருந்தும் - உன்

மன்னிப்பில் பனிபோல் கரையும்

கருணையின் மழையில் நனைந்தால் - உன்

ஆலயம் புனிதம் அருளும்


2. வலையினில் விழுகின்ற பறவை - அன்று

இழந்தது அழகிய சிறகை

வானதன் அருள்மழை பொழிந்தே - நீ

வளர்த்திடு அன்பதன் உறவை