மழலை இதயம் நாடி வருவோம் என விழைவீரோ இசைக் குழலின் ஒலியில் மயங்குவோரே பேச வருவீரோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மழலை இதயம் நாடி வருவோம் என விழைவீரோ

இசைக் குழலின் ஒலியில் மயங்குவோரே பேச வருவீரோ

மானைப்போல் தவித்து நிற்கும் இதயம் பாரீரோ

தேனைப் போல அருள் சுரந்து தேற்ற வாரீரோ


1. குழந்தை போல பேச எனக்கு இதயமில்லையே

மழலைச் சொல்லும் நாட்களாக மறந்து போனதே (2)

இளமைப் பொலிவில் இதயம் தானும் இறுகிப் போனதோ

வளமை சேர்க்கும் உனை மறந்து மயங்கிப் போனேனே


2. பாவி என்னைப் பார்த்துப் பார்த்து பரிதவிக்கின்றீர்

மேவி மேவி அழைத்து அழைத்து அன்பு செய்கின்றீர் (2)

தவழ்ந்து தவழ்ந்து தேடி தேவா உன்னை அடைந்துள்ளேன்

மகிழ்ந்து என்னை ஏற்றுப் பாவ பொறுத்தலளிப்பீரோ