காணிக்கைப் பொருட்களை இறைவா எம் கரங்களில் ஏந்தி உம் பீடம் வந்தோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கைப் பொருட்களை இறைவா எம்

கரங்களில் ஏந்தி உம் பீடம் வந்தோம் (2)


1. எங்களின் இதயத் தோட்டத்திலே

எழில் மலர் காய்கனி நிறைந்ததய்யா (2)

பொங்கிடும் மகிழ்வுடன் பறித்து வந்து -2 உம்

பொன்னொளி பீடத்தில் குவித்து வைத்தோம்


2. கோதுமை மாவுடன் எம் மனதில்

கொண்டுள்ள ஆசையைப் பிசைந்தெடுத்து (2)

வேதனைத் தீயினில் வேக வைத்து -2 நல்

வெண்ணிற அப்பமாய்க் கொண்டு வந்தோம்