ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே வாழ்வும் செயலும் சிந்தனையும் வாஞ்சையோடு அளிக்கின்றேன் ஏற்றருள்வீர் எம் பிதாவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஏழை எந்தன் உள்ளத்தை ஏந்தித் தட்டில் தாங்கியே

வாழ்வும் செயலும் சிந்தனையும் வாஞ்சையோடு அளிக்கின்றேன்

ஏற்றருள்வீர் எம் பிதாவே - 2


1. நீளக் கிண்ண இரசமதிலே நீர்த்துளி போலே கலந்து

நேச இயேசுவின் பாசத்திலே நிரந்தரமாய் நான் நிலைத்திடவே

ஆசைக்கொண்டேன் அருள்புரிவீர் - 2


2. இன்றும் என்றும் உம்மிடமே இயேசுவே நான் வாழ்ந்திடுவேன்

இனிமேல் வாழ்வது நானல்ல இயேசுவே என்னில் வாழ்ந்திடுவார்

என்ற வரத்தை எனக்களிப்பீர் -2