மனமென்னும் பொன்தட்டில் இறைவா எம் காணிக்கை தந்திட்டோம் ஏற்பாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மனமென்னும் பொன்தட்டில் இறைவா - எம்

காணிக்கை தந்திட்டோம் ஏற்பாய் (2)


1. புகைபோல மறைகின்ற வாழ்வில் - வெறும்

புகழ்தேடிப் பயனேதும் இல்லை (2) தூபப்

புகைபோல உயர்ந்து நாங்கள் - என்றும்

புனிதராய் வாழ்ந்திட அருள்வாய்


2. அழகோடு இருந்தாலும் பிள்ளை - அது

அழுக்கோடு இருந்தாலும் பிள்ளை (2) என்றும்

பழச்சாற்றில் கலக்கின்ற நீர்போல் - இன்று

பாவியை அணைக்கின்ற உமக்கு