நீயின்றி நானில்லை இறைவா இறைவா இறைவா இறைவா வருவாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீயின்றி நானில்லை இறைவா

இறைவா இறைவா இறைவா வருவாய்

வருவாய் வருவாய் வருவாய் அருள்வாய்

நீயின்றி நானில்லை இறைவா - உன்

உறவின்றி உயிரில்லை தலைவா (2)

உன் புகழ்ப் பாடி உன்னருள் வேண்டி

எந்நாளும் நான் வாழுவேன்


1. கல்வாரி செந்நீரை எனக்கெனச் சிந்தி

அன்புக்கு இலக்கணம் காட்டி நின்றாய் (2)

பணிவென்றால் எதுவென்று பாதத்தைக் கழுவி -2

பணிவுக்கு புதுப் பொருள் தந்துவிட்டாய்

போகின்ற பாதை இருளாகிப் போனால் - என்

பாதைக்கு நீயே ஒளியாவாய்


2. கண்ணீரில் வாழ்ந்த எளியவர் பலரை

நெஞ்சோடு அணைத்து உயிர் கொடுத்தாய் (2)

நோயுற்று நொந்த உள்ளங்கள் தேடி -2

குணம் தந்து காத்து அருள் புரிந்தாய்

உறவெல்லாம் என்னை உதறிப் போனாலும்

உறவாய் உயிராய் இருந்திடுவாய்