நாமணக்குது இயேசு என்னும் நாமம் சொன்னாலே நெஞ்சினிக்குது இயேசுவுக்கு நன்றி சொன்னாலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நாமணக்குது இயேசு என்னும் நாமம் சொன்னாலே

நெஞ்சினிக்குது இயேசுவுக்கு நன்றி சொன்னாலே (2)

தந்தானே தந்தானா - 2 தந்தானே ஓ யா


1. ஆழ்கடலில் அலை நடுவே என் துணை நீயே

ஆதரவாய் வந்து கரை சேர்ப்பதும் நீயே

என்னை என்றும் வழி நடத்தும் ஆயனும் நீயே

புல்வெளிக்குக் கூட்டிச் சேர்க்கும் மேய்ப்பனும் நீயே

உன்னை விட்டுப் பிரிந்து ஏங்கித் தவிக்கும் வேளையில்

தேடி வந்தே என்னை சொந்தமாக்கினாய்

நன்மை யாவும் தந்த எங்கள் அன்பு தெய்வமே

நன்றி நன்றி என்று கோடி சிந்து பாடுவேன்


2. துன்பம் என்னைச் சூழ்ந்த போது துணையென நின்றாய்

அன்னை போல அருகிருந்து அடைக்கலம் தந்தாய்

அன்பில் என்றும் வாழ எனக்கு அறிவுரை தந்தாய்

பண்பில் என்றும் வாழப் பத்துக்கட்டளை தந்தாய்

அன்பினாலே உன்னை எனக்கு உணவெனத் தந்தாய்

என்றும் உந்தன் கண்மணிபோல் காத்திருக்கின்றாய்

வான் படை ஏழு தந்த இயேசு தேவனே

வாழி உந்தன் நாமம் என்று நன்றி சொல்லுவேன்