வானத்தில் இருந்து வையகம் எழுந்த தூய ஆவியே வருக


வானத்தில் இருந்து வையகம் எழுந்த

தூய ஆவியே வருக

ஞானத்தின் ஒளியை மனதினில் ஏற்ற

மாசற்ற அன்பே வருக


1. உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே

உண்மையின் வடிவே வருக

பயிருக்கு மழையே பார்வைக்கு ஒளியே

பரமனின் அருளே வருக


2. கீழ்த்திசை வானும் வாழ்த்திசை பாடும்

காலைக் கதிரே வருக

ஆழ்கடல் மீதினில் அலையுடன் ஆடும்

ஆனந்த நிறைவே வருக