ஏழைக்குப் பங்காளனாம் பாவிக்கு இரட்சகனாம் இயேசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவனாம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஏழைக்குப் பங்காளனாம் பாவிக்கு இரட்சகனாம்

இயேசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவனாம்


1. மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்

மாடு கட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மா

அந்திவானம் சிவக்குதம்மா அல்லிமலர் சிரிக்குதம்மா

ஆண்டவனாம் இயேசுபிரான் அன்பு மனம் மணக்குதம்மா


2. முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்கு

கல்வாரி சிலுவையிலே காயம்பட வைத்தனரே

உயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு அய்யா

நீயின்றி உலகத்திலே நீதி தெய்வம் ஏதுமுண்டோ