உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில் ஊற்ற வேண்டும் இந்த நாளிலே உலகமெங்கும் சாட்சி நாங்களே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில்

ஊற்ற வேண்டும் இந்த நாளிலே

உலகமெங்கும் சாட்சி நாங்களே (2)


1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே

பெருமழை போல் ஆவி ஊற்றினீர் (2)

துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை -2

தாங்க வேண்டும் உந்தன் ஆவியால் - 2


2. ஆவியின் கொடைகள் வேண்டுமே

அயல்மொழியில் துதிக்க வேண்டுமே (2)

ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும் -2

ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே -2