வாழ்வின் தோட்டத்தில் வகைவகையான வண்ணமலர்கள் கண்டேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வாழ்வின் தோட்டத்தில் வகைவகையான

வண்ணமலர்கள் கண்டேன் - அதில்

சிறந்த மலர்களை மகிழ்வுடன் பறித்து

மாலை ஒன்று தொடுத்தேன் (2)

மாலையே உமது பீடத்தின் காட்சியாய் ஏற்றிடுவாய் இறைவா -2

ஏற்றிடுவாய் இறைவா


1. உறவுகள் என்னும் உன்னதப் பூக்கள்

வாழ்வினில் மலரச் செய்தாய் (2)

வாழ்வினில் மலரச் செய்தாய் - அவை நறுமணம் கமழ்ந்து

நாவினால் இன்பம் பெருகிடவே செய்வாய் -2


2. தொடர்ந்திடும் பணியில் உடனிருப்பவர்க்கு

தோழமைக் கரங்கள் தந்தாய் (2)

தோழமை கரங்கள் தந்தாய் - நான் சோதனை வேளையில்

துவண்டு விழாமல் துணிவுடன் நடக்கச் செய்தாய் -2