ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது


ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம்

எவ்வளவு இன்பமானது


1. உம்முடைய சன்னிதியில் தங்கியிருப்போர்

உண்மையிலே பாக்கியவான்கள்

தூய மனதுடன் துதிப்பார்கள்

துதித்துக் கொண்டிருப்பார்கள் - ஆமென்


2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்

உண்மையிலே பாக்கியவான்கள்

ஓடினாலும் களைப்படையார்

நடந்தாலும் சோர்வடையார் - ஆமென்


1. கண்ணீரின் பாதையில் நடக்கும் போதெல்லாம்

களிப்பான நீரூற்றாய் மாற்றிக் கொள்வார்கள்

வல்லமை மேலே வல்லமை கொண்டு

சீயோனைக் காண்பார்கள் - ஆமென்