இஸ்பிரீத்துசாந்து

 1. விசுவாசப் பிரமாணத்தின் 8-ம் பிரிவைச் சொல்லு.

“இஸ்பிரீத்துசாந்துவை விசுவசிக்கிறேன்.”

2. இந்தப் பிரிவில் நாம் விசுவசிக்கிறதென்ன?

இஸ்பிரீத்துசாந்துவானவர் அர்ச். திரித்துவத்தின் மூன்றாம் ஆளென்றும், அவர் பிதாவினிடமிருந்தும், சுதனிடமிருந் தும் புறப்பட்டு வருகிறாரென்றும் விசுவசிக்கிறோம்.

3. பிதாவையும் சுதனையும் விசுவசிக்கிறதுபோல் இஸ்பிரீத்து சாந்துவையும் ஏன் விசுவசிக்கிறோம்?

ஏனெனில் பிதாவும், சுதனும் மெய்யான சர்வேசுரனா யிருப்பதுபோல், இஸ்பிரீத்துசாந்துவும் மெய்யான சர்வேசுரனா யிருக்கிறார்; பிதாவோடும், சுதனோடும் ஒரே சர்வேசுரனாயிருக் கிறார்.

76. (4) சேசுநாதர் சுவாமி பரலோகத்திற்கு எழுந்தருளின பத்தாம் நாள் என்ன செய்தார்?

தம்முடைய அப்போஸ்தலர்களுக்குத் திடனாக இஸ்பிரீத்து சாந்துவை அனுப்பினார்.

1. சேசுநாதர் இஸ்பிரீத்துசாந்துவை அனுப்புவதாக வாக்குக் கொடுத்திருந்தாரா?

சேசுகிறீஸ்துநாதர் திவ்விய இஸ்பிரீத்துசாந்துவை அனுப்புவதாக தாம் மரணமடைகிறதற்கு முன் பலமுறை வாக்குக் கொடுத்திருந்தார். விசேஷமாய் இராப்போசனத்துக்குப் பின் அப்போஸ்தலர்களுக்குச் செய்தருளின பிரசங்கத்தில், சேசுநாதர் அவர்களை நோக்கி: “நான் போவேனாகில், தேற்றுகிறவரை (அதாவது இஸ்பிரீத்துசாந்துவை) உங்களிடத்தில் அனுப்புவேன்” என்றார் (அரு.16:7). மேலும் ஜெருசலேமுக்குப் போய் தமது வாக்கு நிறைவேறும் வரைக்கும் அங்கேயே இருக்கும்படி, தாம் மோட்சத் திற்கு எழுந்தருளிப் போகும் சமயத்தில் அப்போஸ்தலர்களுக்குத் திருவுளம்பற்றினார் (லூக். 24:49).

2. சேசுநாதர் அந்த வாக்கை எப்போது நிறைவேற்றினார்?

அவர் பரலோகத்துக்கு எழுந்தருளி பத்தாம் நாளாகிய “பெந்தேகோஸ்த்” எனப்பட்ட பண்டிகையன்று இஸ்பிரீத்து சாந்துவை அனுப்பினார்.

3. பெந்தேகோஸ்த் என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?

கிரேக்க மொழியில் ஐம்பதாம் நாள் என்று அர்த்த மாம். பாஸ்காப் பண்டிகைக்குப் பிறகு ஐம்பதாம் நாளிலே யூதர்கள் தங்கள் நிலத்தில் விளைந்தவைகளைச் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கக் கடமைப்பட்டிருந்தார்கள்.

4. இஸ்பிரீத்துசாந்துவானவர் அப்போஸ்தலர்கள்மேல் எவ்வாறு இறங்கிவந்தார்?

ஆண்டவர் தங்களுக்குக் கற்பித்தபடி, அவர் மோட்சத் துக்கு எழுந்தருளினபின், வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்ட இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றுக்கொள்ளும்படி அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஜெருசலேம் பட்டணத்தில் கடைசி இராப் போசனம் அருந்தின அறையில் சேர்ந்து, தேவமாதாவோடு ஒன்றித்து, செபித்துக் கொண்டிருந்தார்கள். பெந்தேகோஸ்த் பண்டிகையன்று காலை நேரத்தில், பலத்த காற்று அடித்தாற்போல் திடீரென வானத்தினின்று ஓர் முழக்கம் உண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுமையும் நிரப்பிற்று. அல்லாமலும், அக்கினிமயம் போன்ற பிரிந்த நாவுகள் அவர்களுக்குத் தோன்றி, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து தங்கினது (அப். நட. 2:3). அப்போது அவர்கள் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட் டார்கள்.

5. ஏன் சேசுநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளின பிறகு மாத்திரம் இஸ்பிரீத்துசாந்துவானவர் அனுப்பப்பட்டார்?

சேசுநாதர் தமது மரணத்தின் பேறுபலன்களைக் கொண்டு இஸ்பிரீத்துசாந்துவின் அனுப்புதல் என்கிற பிரசாதத் தைப் பெற்றார். அந்தத் திவ்விய அனுப்புதல் அவருடைய திருப் பாடுகளின் கனியாயிருக்கின்றது. மனுஷீகம் மகிமை அடைந்தபிறகு மாத்திரம் இஸ்பிரீத்துசாந்துவை அனுப்புகிறதற்கு தகுதியாயிருந்தது (அரு. 7:39). சேசுநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளினபோதுதான் அவருடைய மனுஷீகம் மகிமைப்பிரதாபத்தை அடைந்தது.

6. ஏன் சேசுநாதர் இஸ்பிரீத்துசாந்துவை அனுப்பினார்?

சேசுநாதர் 

(1) தமது மகிமைக்காகவும்,

(2) அப்போஸ்தலர்களைத் தேற்றி விசுவாசத்தில் உறுதிப்படுத்துகிறதற்காகவும், 

(3) அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறதற்காகவும்,

(4) அவர்கள் தமது திருச்சபையை ஸ்தாபிக்கத் தகுந்த வர்களாயிருக்கும்படியாகவும், இஸ்பிரீத்துசாந்துவை அனுப்பினார்.

7. எப்படி இஸ்பிரீத்துசாந்துவானவர் தம் வருகையால் சேசு நாதரை மகிமைப்படுத்தினார்?

“சத்திய இஸ்பிரீத்துவாகிய அவர் வரும்போது என்னை மகிமைப்படுத்துவார். ஏனெனில் என்னுடையதினின்று பெற்றுக் கொண்டு உங்களுக்கு அறிவிப்பார்” என்று சேசுநாதர் திருவுளம் பற்றினார் (அரு. 16:13,14). மேலும் இஸ்பிரீத்துசாந்து திருச் சபையை ஆரம்பத்திலிருந்தே ஸ்திரப்படுத்திக் கொண்டு வருகிறதி னால் அவர் சேசுநாதரை மகிமைப்படுத்துகிறார்.

8. இஸ்பிரீத்துசாந்து அப்போஸ்தலர்களை விசுவாசத் தில் ஸ்திரப்படுத்தினாரா?

இஸ்பிரீத்துசாந்துவை அடைவதற்கு முன் அப்போஸ் தலர்கள் சேசுநாதருடைய போதனைகளைக் கண்டுபிடிக்காமல், விசுவாசத்தில் பலவீனர்களாயிருந்து, அவர் உயிர்த்தபின் முதலாய் அவரைச் சர்வேசுரனென்று விசுவசிக்கத் தத்தளித்தார்கள். மேலும் ஞானகாரியங்களைக் கண்டுபிடிக்க அவர்களால் கூடாமல் போயிற்று. ஒருநாள் சேசுநாதர் அவர்களுடைய கண்டுபிடியாமையைக் கண்டு, “இவ்வளவு காலமாய் நான் உங்களுடனேகூட இருந்தும், நீங்கள் என்னை அறிந்து கொள்ளவில்லை” என்று சொல்லி அவர்களைக் கண்டித்தார் (அரு. 14:9).

இஸ்பிரீத்துசாந்துவானவர் அவர்கள்மேல் இறங்கி வந்து, “தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவானவர் சகலத்தையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (அரு. 14:26), “நான் இன்னும் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அநேகக் காரியங்கள் உண்டு. ஆனால் இப்பொழுது அவைகளைத் தாங்கமாட்டீர்கள். நித்திய இஸ்பிரீத்துவாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்தையும் உங்களுக்குப் படிப்பிப்பார்” (அரு. 16:12,13) என்று சேசுநாதர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். உள்ளபடி:

(1) அவர்களிடத்திலிருந்த சந்தேகங்களும், அறியா மையும் நீங்கி சேசுநாதர் படிப்பித்த சத்தியங்களையெல்லாம் கண்டுபிடித்தார்கள்.

(2) அவர்கள் மறந்துபோன போதகங்கள் எல்லாம் ஞாபகப்படுத்தப்பட்டன.

(3) இன்னும் சேசுநாதர் அவர்களுக்குச் சொல்லா திருந்த சத்தியங்கள் இஸ்பிரீத்துசாந்துவினால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டன.

(4) மேலும் இஸ்பிரீத்துசாந்து அவர்களை வேத சத்தியத்தின் தவறாத போதகர்களாக நியமித்து, அவர்களுக்கு விசுவாசம், அறிவு, புத்தி விவேகம் முதலியவைகளைக் கொடுத்து அவர்களை விசுவாசத்தில் உறுதிப்ப்படுத்தினார்.

9. எப்படி இஸ்பிரீத்துசாந்து அப்போஸ்தலர்களைப் பரிசுத்தப் படுத்தினார்?

அவரைப் பெறுவதற்கு முன் அப்போஸ்தலர்கள் இலெளகீகப் புத்தியுள்ளவர்களாயிருந்து, உலக நன்மைகளை மாத்திரம் நாடித் தேடித் திரிகிறவர்களாயிருந்தார்கள். இப்படியே ஒருநாள் தங்களில் அதிகப் பெரியவனாகக் காணப்படுகிறவன் யார் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது (லூக். 22:24). மற்றொரு நாளில், அருளப்பரும், இயாகப்பரும் சேசுநாதர் ஏற்படுத்தி வந்த இராச்சியத்தை இவ்வுலக இராச்சியம் என்று உத்தே சித்து, அவர்களில் ஒருவர் சேசுநாதருடைய வலது பாரிசத்திலும், மற்றொருவர் இடது பாரிசத்திலுமாக உட்காரும்படி விசேஷ சுதந்தரத்தைக் கேட்டார்கள் (மாற். 10:37). இஸ்பிரீத்துசாந்து வானவர், அவர்கள் இருதயத்தினின்று பாவத்தையும், உலக நன்மைகளின் பேரில் ஆசையையும், சுயபட்சத்தையும் நீக்கி, அவர்களிடத்தில் பக்தி, தேவசிநேகம் முதலிய புண்ணியங்களை வளரச் செய்து தமது வரங்களையும் ஞானக் கனிகளையும் அவர்களுடைய இருதயத்தில் விசேஷ விதமாய்ப் பொழிந்தருளி, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினார்.

10. திருச்சபையை ஸ்தாபிக்க இஸ்பிரீத்துசாந்து அப்போஸ் தலர்களை எப்படி தகுந்தவர்களாக்கினார்?

(1) இஸ்பிரீத்துசாந்து வருகைக்கு முன் அப்போஸ் தலர்கள் திறமையற்றவர்களும், கோழைகளுமாயிருந்தார்கள். சேசுநாதர் பாடுபடும்போது அவரைவிட்டு ஓடிப் போனார்கள். சேசுநாதரைக் கொலை செய்த யூதர் தங்களையும் துன்பப்படுத்து வார்களென்று பயந்து ஜெருசலேம் பட்டணத்து வீதிகளில் நடமாடாமல் ஒளிந்து கொண்டு இருந்தார்கள்.

இஸ்பிரீத்துசாந்துவைப் பெற்றபின் அவர்களுக்கு இருந்த பயம் தெளிந்து, அவர்கள் வீதிகளில் சென்று, சேசுநாத ருடைய தெய்வீகத்தைப் பிரசங்கித்து, சாட்சி சொல்லி, அதனால் நேரிடுகிற எவ்வித பயங்கர உபாதைகளுக்கும், கடைசியாய்க் கொடூர மரணத்துக்குப் பின்வாங்காத தைரியசாலிகளாயிருந்தார்கள்.

(2) சகல மனிதர்கள் அவர்களுடைய பிரசங்கங் களைக் கண்டுபிடிக்கும்படியாக பல பாஷை பேசும் வரத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

(3) புறசாதி ஜனங்கள் அப்போஸ்தலர்களால் போதிக்கப்பட்ட வேதசத்தியங்கள் மெய் என்று நிச்சயித்துக் கொள்ளும்படியாக அற்புதங்கள் செய்யும் வரத்தை அவர்களுக்கு அளித்தார்.

11. இஸ்பிரீத்துசாந்துவானவர் அப்போஸ்தலர்கள் மேல் இறங்கும் சமயத்தில் அவர்களுக்கு ஒரு விசேஷ வரம் கொடுக்கவில்லையா?

“அவர்கள் எல்லாரும் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப் பப்பட்டு, பேசும்படிக்கு இஸ்பிரீத்துசாந்து அவர்களுக்குக் கொடுத்த வரத்தின்படியே பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள்” என்று வேதாகமத்தில் எழுதியிருக்கிறது (அப். நட.2:4).

12. இஸ்பிரீத்துசாந்துவானவர் அப்போஸ்தலர்கள் மேல் மாத்திரமா இறங்கி வந்தார்?

இஸ்பிரீத்துசாந்து கிறீஸ்தவ வேதத்தின் ஆதித் துவக்கத்தில் காணக்கூடாத விதமாய் அநேக முறை விசுவாசிகள் மேல் இறங்கி, பற்பல மேன்மையான வரங்களை அவர்களுக்கு அளிக்கச் சித்தமானார். உதாரணமாக: பற்பல பாஷைகள் பேசவும், தீர்க்கதரிசனங்கள் சொல்லவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும் (அப். நட. 8:7, 10:46, 14:9; 19:6).

13. இப்போது இஸ்பிரீத்துசாந்து இறங்கிவருகிறதில்லையா? 

இப்போது முதலாய் நாம் காணக்கூடாத விதமாய்த் திருச்சபையிலும், ஆத்துமங்களிலும் இறங்கிவந்து இடைவிடாமல் மனித அர்ச்சிப்பை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.

14. நமது ஆத்துமத்தில் எப்பொழுது முதன்முதல் இஸ்பிரீத்து சாந்து வருகிறார்?

நாம் ஞானஸ்நானம் பெறும்போதுதான்.

15. இஸ்பிரீத்துசாந்துவானவர் இப்போது வரும்போது மேற்கூறப் பட்ட மேன்மையான வரங்களை ஏன் கொடுக்கிறதில்லை?

மனிதனுடைய அர்ச்சிப்பு இஸ்பிரீத்துசாந்துவின் அதியுன்னத கிரியையாம். மேற்கூறப்பட்ட வரங்கள் இஷ்டப் பிரசாதத்தைப் போல் மனிதனைச் சர்வேசுரனுக்குப் பிரியப்படுத்து கிறதில்லை. ஆனால் திருச்சபை ஆதித்துவக்கத்தில் பிறருடைய பிரயோசனத்துக்காகவும், மெய்யான திருச்சபையைச் சகலர் முன்னும் உறுதிப்படுத்துவதற்காகவும், அந்த வரங்கள் உதவியா யிருந்தபடியால், இஸ்பிரீத்துசாந்து இவைகளை விசுவாசிகளில் சிலருக்கு அளிக்கச் சித்தமானார். “பாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசமில்லாதவர்களுக்கு அடையாளமா யிருக்கிறது” என்றார் அர்ச். சின்னப்பர் (1 கொரி. 14:22).

16. இஸ்பிரீத்துசாந்துவானவர் திருச்சபையில் என்ன வேலை செய்கிறார்?

(1) இஸ்பிரீத்துசாந்து தமது இடைவிடாத பிரசன்னத் தால் திருச்சபைக்கு எப்போதும் உயிர் தந்து உதவி புரிகிறார்;

(2) அதைத் தம்மோடு ஐக்கியமாக்குகிறார்;

(3) அப்போஸ்தலர்கள் படிப்பித்த போதனைகள் யாதொன்றிலும் திருச்சபை தவறிப்போகாதபடி, அதை உறுதிப் படுத்துகிறார்;

(4) உண்மையும் பரிசுத்தமுமான பாதையிலிருக்கும் படி அதை ஆண்டு நடத்துகிறார்;

ஆகையால் இஸ்பிரீத்துசாந்து திருச்சபையின் ஆத்துமம் போலிருக்கிறார்.

17. இஸ்பிரீத்துவானவர் திருச்சபைக்கு ஆத்துமம்போல் இருக்கிற தெப்படி?

அர்ச். அகுஸ்தீன் அதை நேர்த்தியாகக் காண்பித் திருக்கிறார். அவர் எழுதுவதாவது: சரீரத்தின் மட்டில் ஆத்துமத் துக்குள்ள சம்பந்தமென்னவோ, அதே வித சம்பந்தம் சேசுகிறீஸ்து வின் ஞான சரீரமாயிருக்கிற திருச்சபையின் மட்டில் இஸ்பிரீத்து சாந்துவுக்கு உண்டு. ஒரு சரீரத்தின் சகல அவயவங்களுக்கும் ஆத்துமம் செய்வதை, இஸ்பிரீத்துசாந்து திருச்சபை முழுதுக்கும் நிறைவேற்றுகிறார்.

“மனித ஆத்துமமானது, எந்தச் சரீரத்தோடு ஒன்றித்திருக் கிறதோ, அதன் சகல அவயவங்களுக்கும் உயிர் கொடுக்கிறது. திருச்சபையின் ஆத்துமமான இஸ்பிரீத்துசாந்துவானவர் விசுவாசி களுக்கு ஞான உயிர் கொடுத்து, சிலர் வழியாகப் புதுமைகள் செய்து, வேறு சிலர் மூலமாக சத்தியங்களை வெளிப்படுத்தி, சிலரிடம் கன்னிமையும், மற்ற சிலரிடம் இல்லற ஒழுக்கமும் துலங்கச் செய்கிறார். ஒவ்வொரு அவயவத்துக்குரிய விசேஷ தொழிலும், அதை நிறைவேற்ற விசேஷ சக்திகளும் இருந்த போதி லும், சகல அவயவங்களுக்கும் உயிர் கொடுப்பது ஒரு ஜீவனே.” 

18. இஸ்பிரீத்துசாந்துவானவர் விசுவாசிகளிடத்தில் என்ன செய்கிறார்?

(1) தமது இஷ்டப்பிரசாதத்தாலும், தாம் பொழிந் தருளும் புண்ணியங்களாலும், தமது வரங்களாலும், எல்லா உதவி வரப்பிரசாதங்களினாலும் விசுவாசிகளை அர்ச்சித்து, ஆத்துமத் துக்குத் தேவ ஜீவியம் கொடுக்கிறார்.

(2) நாம் வரப்பிரசாதத்துக்கு இணங்கி நடந்து, நித்திய சீவியத்தை அடையும்படியாக நமது புத்திக்கு ஞான வெளிச்சம் தந்து மனதைத் தூண்டி எழுப்புகிறார்.

(3) இஸ்பிரீத்துசாந்து நமது ஆத்துமத்துக்குச் சுபாவத் துக்கு மேலான சீவியத்தைக் கொடுப்பதால், அவரைத் திருச்சபை யின் ஆத்துமமென்று சொன்னதுபோலவே, நமது ஆத்துமத்தின் ஆத்துமமென்றும் வேதசாஸ்திரிகள் அழைத்திருக்கிறார்கள்.

“உங்கள் சரீரம், உங்களிடத்திலிருக்கிறவரும், சர்வேசுர னிடத்தில் நீங்கள் பெற்றுக் கொண்டவருமாகிய இஸ்பிரீத்து சாந்துவின் ஆலயமென்றும், நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல வென்றும் அறியீர்களோ?” (1கொரி. 6:19).

19. இஸ்பிரீத்துசாந்துவை இழந்துபோகக் கூடுமோ?

சாவான பாவம் கட்டிக் கொள்ளும்போது, நாம் இஸ்பிரீத்துசாந்துவை இழந்து போகிறோம். ஆனால் சாவான பாவத்திற்குப் பொறுத்தலடைந்தவுடனே மறுபடியும் அவரைப் பெற்றுக் கொள்ளுகிறோம்.

20. இஸ்பிரீத்துசாந்துவின் மட்டில் நமக்கு விசேஷ கடமைகள் உண்டா?

உண்டு. அவைகளாவன:

(1) நமது ஆத்துமத்தினின்று அவரைப் போக்கடிக் காதபடி சாவான பாவத்தைக் கட்டிக் கொள்ளாதிருக்கிறது (1 தெச. 5:19);

(2) அவரை மனநோகப் பண்ணும் அற்பப்பாவத்தை முதலாய் விலக்குகிறது (எபே. 4:30);

(3) அவர் அளிக்கும் ஏவுதலை எதிர்க்காதிருக்கிறது (அப். நட. 7:51).

ஆனால் இந்தக் கடமைகளை அனுசரிக்கிறது பற்றாது. இஸ்பிரீத்துசாந்துவின் வழியாகத்தான் சேசுநாதர் சம்பாதித்த பேறுபலன்களைப் பெற்றுக் கொள்ளுகிறோமென்றும், அவர் ஆத்துமத்துக்குத் தேவ இஷ்டப்பிரசாதம் அளிப்பதினால் நமது அர்ச்சியசிஷ்டதனத்திற்கு ஆதிகாரணர் அவரே என்றும், அவர் நமது ஆத்துமத்தைத் தமது மகா பிரிய வாசஸ்தலமாகத் தெரிந்து கொள்ளுகிறாரென்றும் ஞாபகப்படுத்தி, அவர்மீது நாம் விசேஷ பக்தியைக் காண்பிக்க வேண்டும்.

21. எப்படி இஸ்பிரீத்துசாந்துவின் பேரில் நமது பக்தியைக் காண்பிக்கலாம்?

(1) இஸ்பிரீத்துசாந்துவானவர் நமது ஆத்துமத்தில் செய்யும் வாசத்தைப் பற்றி, அடிக்கடி விசுவாச முயற்சி செய்து, அவரை ஆராதித்து, அந்தத் திவ்விய பிரசன்னத்தினால் உண்டாகும் ஞானப் பயன்களை அடையும்படி பிரயாசைப்படுவதினாலும்,

(2) செபத்தியான சுறுசுறுப்பினாலும், மற்றெவ்வித புண்ணிய முயற்சிகளாலும் அவருடைய வரமாகிய தேவசிநேக அக்கினியை நமது இருதயத்தில் அதிகமதிகமாய்ப் பற்றியெரியப் பண்ணுவதினாலும், 

(3) அவர் நமது ஆத்துமத்தில் சகல தேவ வரப்பிர சாதங்களையும் பொழிந்தருளுபவராகையால், அவரை நேசித்து, அவருக்கு நன்றியறிலைச் செலுத்துவதினாலும்,

(4) அவர் ஞான சொரூபியாயிருப்பதால், நாம் யாதொரு முக்கியமான வேலையையோ, கிரிகையையோ, தீர்மானத்தையோ பண்ணுவதற்கு முன்னதாக, ஆலோசனைக்காகவும், திடனுக்காகவும் அவரிடம் வேண்டிக் கொள்வதினாலும்; இன்னமும் ஞானக் காரி யங்களைக் கண்டுபிடிக்கக் கூடாதபோதும், அவைகளில் சந்தேகம் பிறக்கும்போதும் அவருடைய வெளிச்சத்தை மன்றாடுவதினாலும்,

(5) அவர் தேற்றுகிறவராகையால் துக்கம், கஸ்தி நேரிடும்போது அவரிடம் ஆறுதலைக் கேட்பதாலும்,

(6) அவர் சத்தியத்தின் இஸ்பிரீத்துசாந்துவானவரா யிருக்கிறபடியால் அவருடைய ஏவுதலுக்கு இணங்கி நடப்பதாலும், 

(7) அவர் தேவசிநேகமாயிருக்கிறதினால் சர்வேசுரன் மட்டில் உருக்கமான நேரத்தை அவரிடத்தில் மன்றாடுவதினாலும்,

(8) அவர் அர்ச்சிக்கிறவரானதால் பாவ சோதனை களைச் செயிக்கவும், புண்ணியத்தை அனுசரிக்கவும் வேண்டிய அனுக்கிரகத்தைக் கெஞ்சிக் கேட்பதினாலும், 

(9) அவர் சர்வ வல்லமையுள்ளவராயிருப்பதால் நமது பலவீனத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டுமென்று அவரைப் பிரார்த் திப்பதினாலும் அவர்பேரில் நமது பக்தியைக் காண்பிக்கலாம்.

77. இஸ்பிரீத்துசாந்து யார்?

அர்ச். திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய சர்வேசுரன். இவர் பிதாவுக்கும் சுதனுக்குமுள்ள அந்நியோன்னிய சிநேகமானவர்.

1. இந்தப் பதிலில் அடங்கியிருக்கும் வேத சத்தியங்கள் எவை?

இஸ்பிரீத்துசாந்து:

(1) மெய்யான சர்வேசுரன்,

(2) ஒரு தேவ ஆள்,

(3) தமதிரித்துவத்தின் மூன்றாம் ஆள்,

(4) பிதாவுக்கும் சுதனுக்குமுள்ள அந்நியோன்னிய சிநேகமானவர்.

2. இஸ்பிரீத்துசாந்து மெய்யான சர்வேசுரனாயிருக்கிறார் என்று நாம் எப்படி அறிவோம்?

(1) “இஸ்பிரீத்துசாந்துவானவர் எல்லாவற்றையும், சர்வேசுரனிடத்தில் ஆழ்ந்திருப்பவைகளை முதலாய் ஊடுருவிப் பார்க்கிறார்” என்றார் அர்ச். சின்னப்பர் (1 கொரி. 2:10).

(2) வேதாகமத்தில் சர்வேசுரன் என்று அழைக்கப் படுகிறார் (1 அரு. 5:7; 1 கொரி. 3:16).

(3) சர்வேசுரனும் இஸ்பிரீத்துசாந்துவும் திவ்விய வரங்களைப் பகிர்ந்து கொடுக்கிறவர்களாகச் சொல்லப்பட்டிருக் கிறார்கள் ( கொரி. 12:11).

(4) அனனியா இஸ்பிரீத்துசாந்துவுக்குப் பொய் சொன்னபோது சர்வேசுரனுக்குப் பொய் சொன்னதாக அர்ச். இராயப்பர் கூறினார் (அப். நட. 5:3,4).

(5) சர்வ ஞானம் (1 கொரி. 2:10), சர்வ வியாபகம் (ஞான. 1:7), சர்வ வல்லபம் (லூக். 1:35), தீர்க்கதரிசன வரம் (2 இரா. 1:21), புதுமை வரம் (மத். 12:28), பாவப் பொறுத்தல் அளிக்கும் வரம் (1 கொரி. 6:11) இவை முதலிய தேவ இலட்சணங்கள் அவருக்குக் குறிக்கப்பட்டிருக்கின்றன.

3. இஸ்பிரீத்துசாந்து மெய்யாகவே தேவ ஆளாயிருக்கிறாரென்று எப்படிக் காட்டலாம்?

(1) புது ஏற்பாட்டில் அவர் ஆள் என்று சொல்லி யிருக்கிறது. “நானும் பிதாவை மன்றாடுவேன்; அவர் என்றென் றைக்கும் உங்களோடு கூட வசிக்கும்படியாகத் தேற்றுகிறவராகிய வேறொருவரை (அதாவது இஸ்பிரீத்துசாந்துவை) உங்களுக்குத் தந்தருள்வார்” (அரு. 14:16).

(2) வேதாகமம் ஒரு தேவ ஆளின் செய்கை, கிரிகை களை அவருடையதென்று சொல்லிக் காட்டுகிறது. “இஸ்பிரீத்து சாந்துவானவர் சகலத்தையும் உங்களுக்குப் படிப்பிப்பார்” (அரு. 14:26). “இஸ்பிரீத்துவானவர் நமது பலவீனத்தைத் தாங்கிக் கொண்டு வருகிறார்... நமக்காகப் பிரார்த்திக்கிறார்” (உரோ. 8:26). “இஸ்பிரீத்துசாந்துவை மனநோகப் பண்ணாதேயுங்கள்” (எபே. 4:30).

(3) திருச்சபையின் போதகமும், பாரம்பரியமும் அதற்கு அத்தாட்சியாயிருக்கிறது.

4. இஸ்பிரீத்துசாந்து தமதிரித்துவத்தின் மூன்றாம் ஆளாயிருக் கிறார் என்பது ஏன்?

சேசுநாதர் பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவின் பெயராலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று கற்பித்ததினால் இஸ்பிரீத்துசாந்து தமதிரித்துவத்தின் மூன்றாம் ஆளாக விளங்குகிறார்.

5. இஸ்பிரீத்துசாந்து பிதாவுக்கும் சுதனுக்குமுள்ள அந்நியோன்னிய சிநேகமானவர் என்று சொல்வானேன்?

இஸ்பிரீத்துசாந்து பிதாவினின்று அல்லது சுதனினின்று பிறக்காமல், ஒரே ஆதியாகிய பிதா சுதன் ஆகிய இவர்களிடமிருந்து புறப்படுகிறார். சுதன் பிதாவினின்று புத்தி வழியாகப் பிறக்கும்போது, இஸ்பிரீத்துசாந்து பிதாவிடத்தினின்றும், சுதனிடத்தினின்றும் மனதின் வழியாய் வீசப்படுகிறார். பிதாவானவரும் சுதனானவரும் தங்களிட முள்ள அளவில்லாத நன்மைத்தனத்தைக் கண்டு, தங்களை நித்திய மாய்ச் சிநேகித்து, தேவசிநேகமாகிய இஸ்பிரீத்துசாந்துவைப் புறப்படச் செய்கிறார்கள். ஆதலால்தான் இவர் பிதாவுக்கும் சுதனுக்குமுள்ள அந்நியோன்னிய சிநேகமானவர் என்று சொல்கிறோம்.

6. இஸ்பிரீத்துசாந்து எங்கே இருக்கிறார்?

அவர் சர்வேசுரனாகி மட்டும் எங்கும் வியாபித்திருப் பதுபோல், நமது ஆத்துமத்தில் இருப்பதுமன்றி, இஷ்டப்பிரசாதத் தின் சீவனை நமக்குக் கொடுக்கும்படி விசேஷ விதமாய் நமது ஆத்துமத்துக்குள் எழுந்தருளி வந்து இருக்கிறார்.

78. அவர் பிதாவுக்கும் சுதனுக்கும் சரியயாத்தவரோ?

ஆம். அவர் பிதாவோடும் சுதனோடும் ஒரே தெய்வ சுபாவம் உடையவராயிருப்பதால் எல்லாத்திலும் அவர்களுக்குச் சரியயாத்தவர் தான்.

“எல்லாவற்றிலும் சரியயாத்தவர்” என்பதற்கு அர்த்தமென்ன?

பிதா சுதனுடைய சுபாவத்துக்கும் இலட்சணங் களுக்கும், இஸ்பிரீத்துசாந்துவின் சுபாவத்துக்கும் இலட்சணங் களுக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை என்று அர்த்தமாம்.

குறிப்பு: இஸ்பிரீத்துசாந்துவின் தன்மை, ஏக திரித்துவ சர்வேசுரன் விளக்கத்தில் விவரித்துச் சொல்லியாயிற்று.

79. இஸ்பிரீத்துசாந்து அப்போஸ்தலர்களின் பேரில் எந்த ரூபமாக இறங்கி வந்தார்?

அக்கினி நாக்கு ரூபமாக இறங்கி வந்தார்.

1. இஸ்பிரீத்துசாந்துவுக்கு இப்பேர்ப்பட்ட ரூபம் உண்டா?

இஸ்பிரீத்துசாந்து சர்வேசுரனாயிருக்கிறபடியால் அவர் உருவம் இல்லாதவர்.

2. அவர் அப்போஸ்தலர்கள் மேல் இறங்கினபோது மேற்படி ரூபத்தை ஏன் எடுத்தார்?

அவர்களுக்குத் தாம் கொடுக்கப்போகிற வரங்கள் எத்தன்மையான வரங்கள் என்று காண்பிக்கத்தான்.

3. அதெப்படி?

(1) அப்போஸ்தலர்கள் வேதத்தைப் போதிப்பார்கள் என்கிறதற்கும், பாஷையெல்லாம் கஷ்டமின்றி அற்புதமாய்ப் பேசுவார்கள் என்கிறதற்கும் நாவானது அடையாளம்.

(2) அவர் அப்போஸ்தலர்கள் மேல் இறங்கி வந்ததி னாலே நமதாண்டவர் கற்றுக் கொடுத்த சத்தியங்களைக் கண்டு பிடிக்கும்படி அவர்களுடைய புத்தியைத் துலக்கப் போகிற வெளிச் சத்திற்கும், அவர்களுடைய இருதயத்தில் எரியப்போகிற தேவ சிநேகத்துக்கும், அக்கினியானது அடையாளமாயிருக்கிறது. 

4. இஸ்பிரீத்துசாந்து ஒரு முறை மாத்திரமா காணக்கூடிய விதமாய் இப்பூமியில் இறங்கி வந்திருக்கிறார்?

(1) சேசுநாதர் ஸ்நாபக அருளப்பர் கையால் தவ ஞானஸ்நானம் பெறும்போது இஸ்பிரீத்து சாந்து மாடப்புறா ரூபமாய் அவர்மேல் இறங்கி வந்தார்.

(2) கிறீஸ்துநாதர் தபோர் மலையில் மறுரூபமான போது கண்கூசும் பிரகாசமுள்ள மேகரூபமாகத் தோன்றினார்.

5. ஏன் மாடப்புறா ரூபத்தை அணிந்து கொண்டார்?

மாடப்புறாவானது சேசுநாதருடைய சிநேகத்துக்கும், சாந்தத்துக்கும், பரிசுத்தத்துக்கும், அவர் தமது மரணத்தால் மனிதனைச் சர்வேசுரனோடு சமாதானமாக்குதலுக்கும் அடையாளமாம்.

6. ஏன் மேக ரூபமாகத் தோன்றினார்?

மெய்யான மனிதனும், தேவனுமாகிய சேசுகிறீஸ்து நாதர் தமது மனுஷீகத்தால் தம்முடைய தெய்வீகத்தை மறைத்தாரென்று காட்டும்படியாகத்தான்.

80. (41) இஸ்பிரீத்துசாந்துவை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

உலகத்தின் எத்திசையிலும் பிரசங்கித்துத் திருச்சபையைப் பரம்பச் செய்தார்கள்.

1. அப்போஸ்தலர்கள் எங்கே பிரசங்கிக்கத் துவக்கினார்கள்?

சகல தேசங்களினின்றும் பாஸ்காப் பண்டிகை கொண்டாடும்படி ஜெருசலேமுக்கு வந்து கூடியிருந்த யூதர்கள் முன்பாக அர்ச். இராயப்பர் முதல் பிரசங்கம் செய்தார். அப்போது மூவாயிரம் பேர் மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்றார்கள் (அப்.நட. 2).

2. அப்போது யூதருடைய மூப்பர்கள் என்ன செய்தார்கள்?

அப்போஸ்தலர்களைத் தங்களிடம் வரவழைத்து இனி சேசு என்பவருடைய பெயரை உச்சரியாமலும், அவருடைய வேதத்தைப் போதியாமலும் இருக்கும்படி கண்டிப்பான கட்டளை யிட்டார்கள் (அப். நட. 4:18).

3. அப்போஸ்தலர்கள் அதற்குச் சம்மதித்தார்களா?

சம்மதிக்கவேயில்லை. மனிதருடைய கட்டளையை விட தேவ கட்டளையைப் பெரிதாக எண்ணி, முன்னிலும் அதிக ஊக்கத்துடன் பிரசங்கித்து வந்தார்கள் (அப். நட. 4:20).

4. அதைப் பார்த்து யூதர்கள் என்ன செய்தார்கள்?

மறுபடியும் அப்போஸ்தலர்களைத் தங்களிடம் வரவழைத்து, அவர்களை சாட்டைகளால் அடிப்பித்து, சிலரைச் சிறைச்சாலையில் அடைத்து, இனி சேசுவைப் பற்றிப் பேச வேண்டா மென்று கற்பித்தார்கள். அப்போதுதான் சங்கிலிகளால் கட்டப் பட்டு சிறையில் அடைபட்டிருந்த அர்ச். இராயப்பரை ஒரு சம்மன சானவர் அற்புதமாய்ச் சிறையினின்று மீட்டு வெளியேற்றினார் (அப்.நட. 12).

5. ஜெருசலேம் பட்டணத்தில் பிரசங்கித்த பிறகு அப்போஸ் தலர்கள் எங்கே போதித்தார்கள்?

யூதேயா நாட்டில் ஊர் ஊராகவும், கிராமம் கிராம மாகவும் பிரயாணம் செய்து, செபக்கூடத்திலும், வீடுகளிலும், வீதிகளிலும் யூதருக்குப் பயப்படாமல் சேசுநாதருடைய திருநாமத் தைப் போதித்துவந்தார்கள்.

6. யூதேயா தேசத்தில் பிரசங்கித்த பிறகு அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?

ஓர் சங்கமாகக் கூடி சில வேத தீர்மானங்களைச் செய்து, வேதத்தைப் போதிக்கும்படி உலகத்தின் நாலா பக்கங் களுக்கும் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் சென்றவிடங்களில் நமதாண்டவர் கட்டளைப்படி மேற்றிராணிமார்களையும், குருக் களையும் அபிஷேகம் செய்து சத்திய திருச்சபையைப் பரவச் செய்தார்கள்.

7. அப்போஸ்தலர்களுக்குள்ளே ஒருவர் நமது இந்தியா வுக்கு வந்து வேதத்தைப் போதித்தாரா?

அர்ச். தோமையார் இந்தியாவுக்கு வந்து வேதத்தைப் போதித்தார்.

8. அப்போஸ்தலர்கள் துன்பமில்லாமல் எளிதாய், சேசுநாதரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபையைப் பரம்பச் செய்தார்களா?

சில தேசங்களில் அரசரும், பிரபுக்களும், மற்ற ஜனங் களும் சந்தோஷத்துடன் சத்திய வேதத்தைக் கைக்கொண்டார்கள். ஆயினும் பற்பல தேசங்களில் அரசரும், பிரஜைகளும் கிறீஸ்து வேதத்தை எதிர்த்து, அப்போஸ்தலர்களையும், புதுக் கிறீஸ்தவர் களையும் சிறையில் அடைத்து, சிலரை நெருப்பால் சுட்டார்கள். சிலரைக் காட்டு மிருகங்களுக்கு இரையாகப் போட்டார்கள், சிலரைக் கத்தியால் வெட்டினார்கள். வேறு சிலரைப் பற்பல விதமாய்ச் சித்திரவதை செய்து கொன்றார்கள்.

9. அப்போஸ்தலர்கள் எல்லோரும் எப்படி இறந்து போனார்கள்?

தாங்கள் போதிக்கிறதெல்லாம் மெய் என்கிறதற்கு அத்தாட்சியாக அவர்கள் எல்லோரும் வேதசாட்சி முடி பெற் றார்கள். அர்ச். அருளப்பர் கொதிக்கிற எண்ணெய் நிறைந்த தொட்டியில் அமிழ்ந்திருந்தாலும், ஒரு வாலிபனைப் போல் அதினின்று மீண்டு எழும்பினார். அர்ச். தோமையார் மயிலையில் வேதசாட்சியாக மரணமடைந்தாரென்று சொல்லப்படுகிறது.

சரித்திரம்

லூசியா, அல்லது பிரகாசியம்மாள் என்பவள் உத்தம கோத்திரத்தில் பிறந்து, பெரும் பணக்காரியாயிருந்தாள். ஒரு உலகத்தான் இவளைக் கலியாணம் முடித்துக் கொள்ள ஆசித்தும் அதற்கு அவள் சம்மதியாததால், இவள் கிறீஸ்தவளென்று அதிகாரிக்குத் தெரியப்படுத்தியதால் பிரகாசியம்மாள் பிடிபட்டுச் சிறையாக்கப்பட்டாள். அதிகாரி நயபயத்தால் பட்ட பிரயாசை யெல்லாம் வீணானதால், அவளைக் கசைகளால் அடிப்பித்தான். அப்போது வேதசாட்சி, “நான் உமக்குச் சொன்னதெல்லாம் இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் சொன்னேன். என்னை இனி சோதிப்பதால் பலனடைய மாட்டீர்” என்று தைரியமாய்ச் சொன் னாள். அதற்கு அதிகாரி, “இஸ்பிரீத்துசாந்து உன்னிடமிருக் கிறாரா?” என்க, “கற்புள்ள இருதயம் அவர் வசிக்கும் தேவாலய மாகும்” என்றாள். “உன் கற்பழிந்தால் இஸ்பிரீத்துசாந்து உன்னை விட்டுவிடுவாரல்லவா?” என்று சொல்லி அர்ச்சியசிஷ்டவளைப் வேசிகளின் வீட்டுக்கு இழுத்துப் போகும்படி கற்பித்தான். எத்தனை பேர் பிடித்து இழுத்தாலும், அவள் அசையாமல் ஸ்தம்பம்போல் அங்கேயே நின்றாள். அங்கிருந்தவர்களெல்லாரும் இவ்வதிசயத் தைக் கண்டு பிரமித்து நிற்கும்போது குரூரனான அதிகாரி வேத சாட்சியைச் சுற்றிலும் விறகை அடுக்கி அவளைச் சுட்டெரிக்க ஆணையிட்டான்.