வியாகுல அன்னையின் விசேஷ நேசர்கள்!

பல அர்ச்சியசிஷ்டவர்கள் வியாகுல அன்னையின்மீது விசேஷ நேசம் கொண்டிருந்தனர். அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் வியாகுல அன்னையின் சுரூபம் ஒன்றை எப்போதும் தன் நெஞ்சின்மீது அணிந்திருந்தார். கனிந்த பக்தியோடு அவர்களை அவர் வணங்கி வந்தார்.

முத். ஹென்ரி சூசோ வியாகுல அன்னையின் மீது மிகுந்த இரக்கம் கொண்டவராய்த் திகழ்ந்தார். அடிக்கடி மாதாவின் வியாகுலங்களைத் தியானித்தவாறு இருந்ததால், மற்ற பாக்கியங்களோடு சேர்த்து, மாதாவின் நேரடியான வெளிப் படுத்தல்களையும் அவர் பெற்றுக் கொண்டார். மாதா அவரிடம்: “சிலுவையின் அடியில் என் தாய்க்குரிய இருதயம் அனுபவித்த ஆழங்காண முடியாத துயர வேதனைகளோடு ஒப்பிடும்போது, ஒரு மனித இருதயம் தாங்கியிருக்கக் கூடிய சகல துக்க துயர வேதனைகளும், ஒரு மிக விஸ்தாரமான பெருங்கடலுக்கு முன் ஒரு நீர்த்துளியைப் போலிருக்கும்” என்று கூறினார்கள். ப அர்ச். அல்போன்ஸ் லிகோரியார் மரியாயின் வியாகுலங் களைத் தமது அனுதின தியானங்களுக்குரிய தியானப் பொருளாகவும், தமது மிக ஆழ்ந்த மனதுருக்கமுள்ள அன்பிற்குரிய பொருளாகவும் ஆக்கிக் கொண்டார். ஒரு முறை அவர் வருடாந்தர தியானப் பிரசங்கங்கள் தந்து கொண்டிருந்த போது, தியான நாட்கள் முழுவதிலும் போதக மேடைக்கு அருகில் வியாகுல மாதாவின் படம் ஒன்றை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைப் பார்ப் பதன் மூலம் விசுவாசிகள் மரியாயின் துன்பங்களை பக்தி யோடு சிந்தித்து, அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட் டிற்குத் தங்களை ஒப்புக்கொடுக்கும்படி தூண்டப்பட வேண்டும் என்று அவர் விரும்பியதால், இப்படிச் செய்தார். தமது பிரசங்கங்களின்போது, அவர் அடிக்கடி வியாகுல மாதாவிடம் மன்றாடினார். உத்தம மனஸ்தாபத்தையும் மனந் திரும்புதலையும் பெற்றுக்கொள்ளும்படி வியாகுல அன்னை யிடம் திரும்புமாறு அவர் பாவிகளை எச்சரித்து, அறிவுறுத்தி வந்தார். அவரது புத்தகங்களில் மாதாவின் வியாகுலங்களின் மீதான பல ஆய்வுக்கட்டுரைகளும் அடங்கும். 

அர்ச்சியசிஷ்டதனமுள்ள பாப்பரசராகிய ஒன்பதாம் பத்திநாதர் நம் இரட்சகருடையவும், அவருடைய வியாகுல மாதாவுடையவும் மிகக் கசப்பான துன்பங்களின்மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். நமது ஆண்டவரின் பாடுகளையும், அவரது திருமாதாவின் வியாகுலங்களையும் அடிக்கடி தியானிப்பது, பாவிகளை மனந்திருப்பவும், மனஸ்தாபம், தவம், பரிகாரம் ஆகியவற்றிற்கான ஒரு நிலையான தூண்டு தலை அவர்களுக்குத் தரவும் மிகப் பயனுள்ள ஒரு வழியாக அவருக்குத் தோன்றியது. எனவே 1847-ல் அவர் வியாகுல மாதாவுக்குத் தோத்திரமாக இயற்றப்பட்ட ஒரு புதிய "அருள்நிறை மந்திரத்தை" அங்கீகரித்தார். அந்த ஜெபம் பின்வருமாறு: