பாத்திமா காட்சிகள் பகுதி- 6

பிரான்சிஸ் : 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் நாள் பிரான்சிஸ் பிறந்தான். தன் தந்தையின் குணங்களை பிரான்சிஸ் நிரம்பக் கொண்டிருந்தான்.பார்பதற்கு வடிவான பையன். அன்பான சுபாவம். கீழ்ப்படியும் குணம். ஆயினும் முரண்டு பிடித்தால் தந்தையின் தண்டனைதான் அவனை வழிக்கு கொண்டு வர முடியும். வீட்டில் குடும்ப ஜெபத்திற்கு வர மாட்டேன் என்று ஒருமுறை புரளி பண்ணியபோது. மார்ட்டோ அவனை மிகவும் தண்டிக்க் வேண்டியதாயிற்று. பிரான்சிஸ் எதற்கும் பயப்பட மாட்டான். எந்த இருட்டிலும் தயக்கமின்றி செல்வான். நரி, முயல் இவற்றைக் காட்டில் போய் பிடித்து வீட்டில் வளர்ப்பான். பாம்பு, பல்லிகளை வேட்டையாடி கோலில் தூக்கி வருவான். குளத்தில் அவைகளை தண்ணீரில் நீந்த வைத்து விளையாடுவான்.

ஜெசிந்தா : 1910-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் நாள் பிறந்தாள். பிரான்சிஸை விட இரண்டு வயது இளையவள் ஜசிந்தா. பார்க்க அழகாயிருப்பாள். கூறிய அறிவுடைய தோற்றம். எந்த நேரமும் குறுகுறுவென்று அங்கும் இங்கும் மீன் போல் தாவுவாள். இளைய பிள்ளைக்குறிய செல்லம் அவளுக்குக் கிடைத்திருந்ததால் மிகவும் அன்புடன் காணப்படுவாள். அதே நேரம் பிடிவாதம் பிடித்தால் என்றால் யாரும் அவளை அசைக்க முடியாது.

எப்படியோ அவள் அருள் நிறைந்த மந்திரத்தை, “ அருள்கள் நிறைந்த மரியாயே வாழ்க “ என்று கற்று வைத்திருந்தாள். “ அருள் நிறைந்த மரியாயே வாழ்க ! “ என்று மாற்றிச் சொல்ல மறுத்து விட்டாள்.

லூசியா, ஜெசிந்தா, ஜஸிந்தா மூவரும் இனைபிரியாத் தோழர்களாகி விட்டார்கள். (லூசியாவின் அத்தைக் குழந்தைகள்தான் அவர்கள்) கூடி விளையாடுவார்கள். கள்ளன் போலிஸ் முதலிய சாதாரண விளையாட்டுக்களை விரும்பி விளையாடுவார்கள். விளையாடிக் களைத்ததும் லூசியா தன் அம்மாவிடம் கேட்ட சேசு கதைகளையும், அப்பா அண்ணண்மாரிடம் கேட்ட அரக்கர், இராஜா ராணிக் கதைகளையும் சொல்லுவாள்.

சேசு கதைகளை, முக்கியமாக சேசு பாடுபட்ட சம்பவங்களை லூசியா சொல்வது கேட்பவர்களுக்கு மிகவும் ஆவலை உண்டாக்கும். ஜஸிந்தா அதில் லயித்து தன்னையே மறந்து விடுவாள். சேசு கசையடி படும்போது தேவதாய் பார்த்து அழுததையும், பாரமான சிலுவையை தாங்க மாட்டாமல் சேசு விழுந்ததையும், கல்வாரி மழையில் சிலுவையில் தொங்கி தாகத்தாலும், வேதனையாலும், பாவத்துக்காக அதுவும் நம்முடைய பாவத்துக்காக உயிர் விட்டதையும் உள்ளம் உருகும்படி சொல்வாள்.

ஜஸிந்தாவுடைய உள்ளத்தில் இவை வெகுவாய்ப் பதிந்து விட்டன.

” பாவம் சேசு ! ரொம்ப பாவம் ! பாவங்கள் உமக்கு இவ்வளவு வேதனை கொடுக்குமானால், இனிமேல் நான் ஒருபோதும் எந்தப்பாவத்தையும் செய்யப்போவதில்லை “ என்று கூறுவாள் ஜஸிந்தா.

ஒரு நாள் மூன்று குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். லூசியாவின் அண்ணன் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருந்தான். அவன் ஜஸிந்தாவைப் பார்த்து, “ ஜஸிந்தா எனக்கு ஒரு முத்தம் கொடு “ என்றான். “ வேறு ஏதாவது வேண்டுமானால் கேள் “ என்றாள் ஜஸிந்தா. “ இல்லை. எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். நீ மூன்று முத்தம் கொடு. போதும். “ என்றான் அவன்.

“ நம் ஆண்டவருக்கு மட்டும்தான் முத்தம் கொடுப்பேன். அவர் எத்தனை முத்தம் கேட்டாலும் கொடுப்பேன் “. என்று கூறிய ஜஸிந்தா, ஓடிப்போய் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த பாடுபட்ட சுரூபத்தை முத்தங்களால் நிரப்பி விட்டாள்.

ஜஸிந்தா தனியாக இருக்கும் போது சுவரில் தொங்கிய பாடுபட்ட சுரூபத்தை எடுத்து மடியில் வைத்து மிக அன்போடு சேசுவைப்பார்த்துக் கொண்டிருப்பாள்.

தொடரும்...

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், புனித சூசை அச்சகம், ரோசா மிஸ்திக்கா, சகாயமாதாப்பட்டனம், தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, 9894398144

இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !