உத்தரியம் - பாகம் 13 - அர்ப்பணிப்பிற்கான அழைத்தல்!

1952 ஆம் ஆண்டுன் அக்டோபர் மாதத்தில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் தனது உத்தரிய அனுபவங்களை பதிவு செய்துள்ளார்.

அவர் இதனை பதிவு செய்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர் உத்தரியம் அணிந்து கொண்டுள்ளார். உத்தரியம் அணிய ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே, தனது வாழ்வின் மிகச் சிறந்த மாற்றங்களை அவர் உணர்ந்ததாக பதிவு செய்துள்ளார்.

மேலும், உத்தரியம் அணிய ஆரம்பித்த உடனே, தினமும் திருப்பலிக்குச் சென்றதாகவும், சில நாட்களுக்குப் பின்னர் திவ்ய நற்கருணை உட்கொள்ள ஆரம்பித்ததாகவும் குறிப்பிடுகின்றார். தவக்காலத்தினை முன்னெப்போதும் இல்லாதவாறு, முழுவதும் அர்ப்பண உணர்வுடன் ஆண்டவரின் பாடுகளை தியானிக்க துவங்கியதாகவும், அதன் வாயிலாக தன்னையே ஆண்டவரின் வழிக்கு தயார்படுத்தி, அவரது வழியில் நடக்க முயற்சிப்பதை உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

கடைசியாக, இவை அனைத்திற்கும் பரிசுத்த தேவதாயாரின் உத்தரியமே காரணம் என பதிவு செய்துள்ளார்.