அக்டோபர் 18

அர்ச். லூக்காஸ் - சுவிசேஷகர் 

இவர் பல தேசங்களில் சுற்றித் திரிந்து உயர்ந்த கல்வியையும், வைத்திய சாஸ்திரங்களையும், ஓவியக் கலையையும் கற்றுத் தேர்ந்தார். அர்ச். சின்னப்பருடைய பிரசங்கத்தைக் கேட்டு கிறீஸ்தவ வேதமே சத்திய வேதமென்று கண்டுணர்ந்து, அதை அப்போஸ்தலரால் ஞானதீட்சை பெற்று, அவருக்கு சீஷனாகி வேதம் போதிப்பதில் அவருக்குத் துணையாக இருந்தார். 

இவர் சேசுநாதரைக் காணப் பாக்கியம் பெறாவிடினும் இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் ஒரு சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் நடபடி என்னும் புத்தகத் தையும் எழுதி வைத்தார். இவர் தேவமாதாவை அடிக்கடி கண்டு பேசி, அவர்கள் மட்டில் அதிக நேசமும் பக்தியும் வைத்தார். 

தேவதாயாரைப்பற்றி மற்ற சுவிசேஷகர்கள் எழுதாத விஷயங்களை லூக்காஸ் எழுதி வைத்ததுடன் அந்த பரமநாயகியின் சாயலையும் சித்தரித்தார். 

இவர் வரைந்த தேவமாதாவின் அநேக படங்களில் ஒன்று இன்றும் உரோமாபுரி கோவிலில் பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது. சென்னை பரங்கிமலையிலும் இவர் வரைந்த தேவத்தாயின் படம் வைக்கப்பட்டு பக்தியுடன் வணங்கப்பட்டு வருகிறது.

அர்ச். சின்னப்பர் வேதசாட்சி முடி பெற்றபின் லூக்காஸ் இத்தாலியா, கால், எஜிப்து முதலிய தேசங்களில் சுற்றித்திரிந்து, வேதம் போதித்து தமது அரிய புண்ணியங்களாலும் புதுமைகளாலும் அநேகரை சத்திய வேதத்தில் மனந்திருப்பி, வேதத்திற்காக இரத்தஞ் சிந்தி மரித்து, மோட்ச சம்பாவனையைச் சுதந்தரித்துக்கொண்டார்.

யோசனை 

பதிதருடைய படிப்பினையை நாம் அருவருத்து, அப்போஸ்தலர்களின் வழக்கத்தைப் பின்பற்றி, கர்த்தருடையவும் தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்ட வர்களுடையவும் திருச்சுரூபம் படம் முதலியவைகளை வீடுகளில் ஸ்தாபித்து, அவைகளைப் பார்க்கும் போது அவர்களுடைய நன்மாதிரிகளைப் பின்பற்ற முயற்சிப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். ஜுலியன் சாபாஸ், வ. 
அர்ச். ஜுஸ்டின், வே. 
அர்ச். மோனன், வே.