மரியாயின் கீதம் (லூக். 1:46-55)

என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றது. என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது.  

ஏனெனில் தமது அடிமையானவளுடைய தாழ்மையைக் கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளினார்.

ஆகையால் இதோ இக்கால முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். 

ஏனெனில் வல்லப மிக்கவர் பெருமையுள்ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார்.  அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.  அவருடைய கிருபையும் தலைமுறை தலைமுறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள் மேலிருக்கிறது.  

அவர் தம் கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார்.  தங்கள் இருதய சிந்தனையில் கர்வமுள்ளவர்களைச் சிதறடித்தார்.

வல்லபமுடைத்தானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி தாழ்ந்தவர்களை உயர்த்தினார்.  பசித்திருக்கிறவனை நன்மைகளினால் நிரப்பி தனவான்களை வெறுமையாய் அனுப்பி விட்டார்.

தமது கிருபையை நினைவுகூர்ந்து தமது தாசனாகிய இஸ்ராயேலை ஆதரித்தார்.  அப்படியே நமது பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் அவரது சந்ததியாருக்கும் ஊழியுள்ள காலம் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார்.

பிதாவுக்கும், சுதனுக்கும்....