உயிருள்ள இறைவனின் உறவினில் இணைந்திட ***

உயிருள்ள இறைவனின் உறவினில் இணைந்திட
வருவீர் திருக்குலமே நம்மைத் தாங்கும் தேவனவர்
நம் நினைவாய் வாழ்கின்றவர்

1. நிலை தடுமாறுவோர் கால்கள் திடன் அடையும்
நீதி வழிதனில் நடத்திடுவார்
தம்மை நம்புவோரின் சோர்வை நீக்கிடுவார்
சுகம் தந்து உயர்த்திடுவார்
புதுச் சிறகினில் கழுகெனப் பறந்து மகிழ்ந்திட
ஆற்றல் அளித்திடுவார்

2. அன்புக் கயிறுகளால் கட்டிக் காத்திடுவார்
அவர் கரங்களில் சரணடைவோம்
பக்கம் சாய்ந்திடுவார் பசி நீக்கிடுவார்
இனி கவலைகள் நமக்கு இல்லை
நம்மை அறிந்து அன்பு செய்ய
ஏங்கும் நெஞ்சம் உண்டு
விரைந்திடு இறைகுலமே