இயேசுவின் தலைமையில் புதியதோர் உலகம் ***

இயேசுவின் தலைமையில் புதியதோர் உலகம்
அமைத்திட எழுந்திடுவோம் - நம்
இதயத்தில் எழுந்திடும் எண்ணங்கள் யாவையும்
இசையுடன் முழங்கிடுவோம்
இறைகுலமே எழுக இறையரசே வருக

1. ஏழைகள் வாழும் தெருக்களில் இறங்கி
இயேசுவே நடந்து சென்றார் - நம்
இறைவனின் அரசு இவர்களுக்குரியது
என்பதை எடுத்துச் சொன்னார் - அந்த
இறைமகன் இயேசுவின் பாதங்கள் வழியில்
பயணத்தைத் தொடர்ந்திடுவோம் - வாழ்க்கை

2. விடுதலை அடைவர் சிறைகளில் வாழ்வோர்
என்று இயேசு சொன்னார் - அவர்
ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமை அற்றோருக்கும்
வழங்குவேன் வாழ்வு என்றார் - நாம்
விழிகளை திறந்து உலகினைப் பார்ப்போம்
ஆவியில் வழிநடப்போம் - தூய