இளங்காலை இவ்வேளையிலே
இறைவன் திரு இல்லத்திலே
இணையில்லா பலி அளித்திடவே
இறைமா குலமே வருவாய்
1. இறைவனும் மாந்தர்களும்
ஒன்றாய் கலந்திடும் இடமிதுவே
இன்பமும் துன்பமுமே
ஒன்றாய் கலந்திடும் இடமிதுவே
2. இறைவனே பலியாகும்
ஈடிணையில்லாப் பலியினையே
பரம பிதாவினுக்கே
பலி செலுத்திடும் இடமிதுவே