இரக்கத்தின் இறைவனின் இறைகுலமே ***

இரக்கத்தின் இறைவனின் இறைகுலமே
இணைவோம் பலிசெய்து மகிழ்வோம்
இகத்தினில் இறைவனின் புகழ்ச்சிகளை
இன்றும் என்றும் சாற்றிடுவோம்

1. மண்ணின் மாந்தரில் நம்மை - சொந்த
மக்களாய் தேர்ந்து கொண்டார்
கண்ணின் இமைபோல் என்றும் - நம்மை
கருணையில் காத்து வந்தார்
பாடிப் புகழ்ந்திடுவோம் பலியில் பலன் பெறுவோம்

2. பிரிந்து மறந்திட்ட போதும் - செய்த
உடன்படிக்கையை அவர் நினைத்தார்
வருந்தி சோர்ந்திட்ட நேரம் - உடன்
இருந்து விருந்தும் அளித்தார்