ஆலயத்தில் நாம் நுழைகையிலே - புது
நினைவுகள் எழுகின்றன - அந்த
நினைவுகளின் புது வருகையிலே - நம்
நெஞ்சங்கள் நிறைகின்றன ஆ
1. அன்பான மகனைப் பலி கொடுத்த
ஆபிரகாம் இங்கே தெரிகின்றார்
பண்பான ஆட்டினைப் பலி ஈந்த
ஆபேலும் இங்கே தெரிகின்றார்
2. எருசலேம் ஆலயம் நுழைந்தவுடன்
இயேசுவும் அங்கு மொழிந்தாரே
என் வீடு இது என் ஜெப வீடு
வன்கள்வர் குகையாய் மாற்றாதீர்