சதா சகாய மாதா சத்திய தெய்வத்தாயே

சதா சகாய மாதா சத்திய தெய்வத்தாயே
நின் மக்கள் எங்களுக்காய்
மன்றாட வேண்டுமம்மா

1. துன்பத்தில் வாடும் மக்கள்
ஆயிரம் ஆயிரமாய்
கண்ணீர் கணவாய் நின்று
உம்மை யாம் கெஞ்சுகிறோம்

2. இதோ உன் அன்னை என்று
என் மீட்பர் இயேசு சொன்னார்
இம்மையில் எம்மைத் தேற்ற
உன்னையன்றி யாரம்மா