ஆண்டவரின் திருச்சந்நிதியில் ***

ஆண்டவரின் திருச்சந்நிதியில்
ஆனந்தமுடனே பாடுவீரே

1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்பீர்
மங்கள கீதங்கள் முழங்கிடுவீர்
அவரே தேவன் என்றறிவீர்
அவரே நம்மைப் படைத்தாரே

2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம்
நாமே அவரது பெருமக்களாம்
துதிப் புகழோடு நுழைந்திடுவோம்
தூய அவரது வாசல்களில்

3. தேவனின் திருப்பெயர் தோத்தரிப்பீர்
தேவனின் நன்மைகள் சாற்றிடுவீர்
தேவனின் கிருபை உண்மையுமே
தலைமுறை தலைமுறை நீடிக்குமே