இன்றைய புனிதர் - ஜனவரி 11 - புனிதர் தியோடசியஸ் ***


புனிதர் தியோடசியஸ்

(St. Theodosius the Cenobiarch)

துறவி, மடாதிபதி, துறவிமடக் கொள்கைகளின் நிறுவனர் மற்றும் அமைப்பாளர்:

(Monk, Abbot and Founder and Organiser of the Cenobitic monasticism)

பிறப்பு: கி.பி. 423

கப்படோஸியா அருகேயுள்ள மொகாரிஸ்ஸஸ் எனும் கிராமம், தூய பாசில் பிராந்தியம் 

(Mogarissos, a village in Cappadocia, Saint Basil's province)

இறப்பு: கி.பி. 529 (சுமார் 105 வயது)

ஜெருசலேம் அருகில்

(Near Jerusalem)

ஏற்கும் சமயம்:

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

"செனோபியார்ச்" (Cenobiarch) எனும் துறவியர் மட தலைவரான தியோடசியஸ், ஒரு துறவியும் துறவு மடாதிபதியும் கிறிஸ்தவ புனிதரும் ஆவார். இவர், "செனோபைட்டிக்" (Cenobitic) எனப்படும் துறவு வாழ்வியல் முறைகளை நிறுவி அமைத்தவர் ஆவார்.

இவர், “தூய பாசில் பிராந்தியம்” (Saint Basil's province), “கப்படோஸியா” (Cappadocia) அருகேயுள்ள “மொகாரிஸ்ஸஸ்” ((Mogarissos) எனும் கிராமத்தில் மிகவும் பக்தி மார்க்கமான குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர், "ப்ரோஹேரசியஸ்" (Proheresius) ஆகும். இவரது தாயார், "யூலோஜியா" (Eulogia) ஆவார். பின்னாளில், இவரது தாயார் யூலோஜியா, தமது மகன் தியோடசியசையே ஆன்மீக தந்தையாக ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ பெண் துறவியாக மாறினார்.

துறவியர்களுக்குரிய தொடக்கங்கள்:

கிறிஸ்துவின் அன்புக்காக ஆபிரகாம் தமது பெற்றோர், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் அனைத்தையும் விட்டுச் சென்றதைப்போல தாமும் செல்ல விரும்புவதாக தமது சிறு வயதிலேயே தியோடசியஸ் உணர்ந்தார். கி.பி. 451ம் ஆண்டு, "சல்செடன்" (Chalcedon) எனுமிடத்தில் புனித நான்காம் கிறிஸ்தவ பேரவை (Holy Fourth Ecumenical Council) நடந்த சமயத்தில் ஜெருசலேம் சென்று சேர்ந்தார்.

அந்தியோக்கியா (Antioch) சென்றடைந்ததும் புனிதர் சிமியோனை (Saint Symeon the Stylite) சந்தித்து அவரது செபம் மற்றும் ஆசீர் பெறுவதற்காக சென்றார். அவர் புனிதர் சிமியோனின் தூணருகே சென்றபோது, அதிசயிக்கத்தக்க விதமாக, தியோடசியஸின் பெயர் சொல்லி ஒரு அசரீரி அழைத்தது. வாழ்த்து கூறிய அந்த அசரீரி, அவரை நிரலை மேலேறி வரவேற்றது. தூணின் மீது ஏறிச் சென்ற தியோடசியஸ், புனிதர் சிமியோனைப் பணிந்து வணங்கினார். இவரை ஆரத்தழுவிய புனிதர் சிமியோன், இவருக்கு ஆசி வழங்கியதுடன், இவர் பெரும் ஆன்மீக மகிமை பெறுவார் என்றும் தீர்க்கதரிசனம் அறிவித்தார்.

ஜெருசலேம் அடைந்த தியோடசியஸ் புனித ஸ்தலங்களை சென்று தரிசித்தார். தனிமை வாழ்வினை ஆரம்பிக்கும் முன்னர் தமக்கென்று கட்டுப்பாடுகளை உருவாக்கி ஏற்றுக்கொள்ள வேண்டுமென எண்ணினார். “தாவீதின் கோபுரமருகே” (Tower of David) கிரேக்க தத்துவ ஞானியும், துறவி மடாதிபதியுமான "லோங்கினஸ்" (Longinus) என்பவரின் மேற்பார்வையில் துறவியர்களுக்குரிய உழைப்பினைத் தொடங்கினார்.

இக்கால கட்டத்தில், "இகேலியா" (Ikelia) என்ற பணக்கார மற்றும் ஆன்மீக பக்தியுள்ள ஒரு பெண், 'பழைய கதிஸ்மா' (The Old Kathisma) என்ற இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டி அதனை ("Theotokos" கிழக்கு மரபுவழி திருச்சபையில் இறைவனின் அன்னை தூய கன்னி மரியாளுக்கு வழங்கப்படும் பெயர்) அர்ப்பணித்தார். “இகேலியா”, தியோடசியஸ் இந்த இடத்திலேயே துறவு மடத்தினை அமைக்குமாறு "லோங்கினசை" (Longinus) வேண்டினார். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். சிறிது காலத்திலேயே எண்ணற்ற யாத்திரிகர்களை தியோடசியஸ் கவர்ந்தார்.

துறவி வாழ்க்கை:

தம்மைப் பாராட்டும் யாத்திரிகர்களிடமிருந்து விலகி மென்மேலும் இறைவனிடம் தம்மை அர்ப்பணிக்க விரும்பிய தியோடசியஸ் “பழைய கதிஸ்மாவை” (Old Kathisma) விட்டு விலகிச் சென்றார். ஒரு மலையின் உச்சியிலே உள்ள ஒரு குகையில் சென்று அமர்ந்தார். இந்த குகைக்கு ஒரு மிகப் பெரிய பாரம்பரியம் உண்டு. ஆண்டவர் இயேசு கிறிஸ்து பிறந்திருந்த வேளையில் விண்மீன் வழிகாட்ட இறைவனை தரிசிக்க வந்திருந்த ஞானிகள் மூவரும் கடவுளை தரிசித்ததன் பிறகு, இந்த மலைக்குகையிலேயே தங்கியிருந்ததாகவும், அதன் பிறகே ஒரு இறைதூதரின் அறிவுரைப்படி தத்தமது நாடுகளுக்கு வெவ்வேறு வழிகளில் சென்றதாகவும் பண்டைய திருச்சபை தந்தையர்கள் கூறுவர்.

குகையில் வசித்த காலத்தில் தியோடசியஸ் சந்நியாச வாழ்வின் பெரும் சாதனைகளைப் புரிந்தார். எந்நேரமும் ஜெபத்திலே மூழ்கியிருந்தார். இரவு நேரங்களில் கூட அவர் நின்றவாறே ஜெபம் செய்தார். அவர் எப்பொழுதும் பசியை உணரவேயில்லை. ஆனால் தாம் தமது தவ வாழ்விலிருந்து விலகும்படியாக நோயில் வீழ்ந்து விடாதிருக்கும் வகையில் போதுமான உணவு உட்கொண்டார். அவர் பேரீச்சம்பழம் மற்றும் “கரோப்” (Carob) எனப்படும் அரேபிய அரபு நாடுகளில் உற்பத்தியாகும் பழுப்பு-ஊதா நிற காய்களையும் ஊறவைத்த பருப்பு வகைகளையும் உண்டார். முப்பது வருடங்களுக்கும் மேலாக ரொட்டி வகைகளை ருசித்தும் பார்க்கவில்லை.

தியோடசியஸ் “பெத்தலகேம்” (Bethlehem) அருகே துறவியர்க்கான ஒரு சிறிய சமூகத்தினை அமைத்தார். பிற்காலத்தில் அது "தியோடசியஸ் துறவியர் மடம்" (Monastery of St. Theodosius) என்று அழைக்கப்பட்டது. இச்சமூகம் பல்வேறுதரப்பட்ட மொழிகள், கலாச்சாரம் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துறவியர்களுடன் வேகமாக வளர்ந்தது. நோயாளிகள்,முதியோர் மற்றும் மன நலம் குன்றியோர்களை கவனித்து சேவை செய்வதில் இச்சமூகம் புகழ் பெற்றது.

தியோடஸியஸின் நண்பரும் நாட்டுப்புற வாசியுமான "சப்பாஸ்" (Sabbas) இவருடன் இணைந்தபோது, அவர் மடாதிபதியாக (Archimandrite) நியமனம் செய்யப்பட்டார். பாலஸ்தீனத்தில் (Palestine) தனிமைப்படுத்தப்பட்டிருந்த துறவியர் அனைவரும் “குலபதி” (Patriarch) “சலூஸ்டியஸ்” (Salustius of Jerusalem) என்பவரால் ஒன்றிணைக்கப்பட்டனர். இச்சமூகத்தில் இருந்த அனைத்து துறவியர்களினதும் தலைமைப் பொறுப்பினை தியோடசியஸ் ஏற்றார். இதுவே (The Cenobiarch) எனப்படும் துறவு வாழ்வியல் முறைகளின் தொடக்கமாகும்.

தியோடசியஸ், (Monophysitism) என்ற கிறிஸ்தவயியலை தீவிரமாக எதிர்த்தார். இதன் காரணமாக, பேரரசன் "அனஸ்டாசியஸ்" (Emperor Anastasius) இவரை சில காலம் தற்காலிகமாக துறவு மடத்திலிருந்து விலக்கி வைத்தார்.

தியோடசியஸ் ஜெருசலேம் அருகே சுமார் 105 வயதில் மரணமடைந்தார்.