ஞான உபதேசம் - வேதக் கற்பனைகள்.

7. கிறீஸ்தவன் அனுசரிக்க வேண்டிய வேத கற்பனைகள் எதிலே அடங்கியிருக்கின்றன?

பத்துக் கற்பனை மந்திரத்திலும், திருச்சபையின் கட்டளை மந்திரத்திலும் சுருக்கமாய் அடங்கியிருக்கின்றன.

1. பத்துக் கற்பனை என்றால் என்ன?

இரண்டு கற்பலகைகளிலே எழுதப்பட்டு, மோயீசனுக்குச் சர்வேசுரனால் கொடுக்கப்பட்ட கட்டளைகளாம்.

2. திருச்சபைக் கட்டளை என்றால் என்ன?

திருச்சபையால் ஏற்படுத்தப்பட்ட கட்டளைகளாம்.