அவபக்தி

1. அவபக்தி ஆவதென்ன?

நேரே சர்வேசுரனுக்காவது அல்லது அவரது ஊழியத்துக்கென்று பிரத்தியேகமாக அபிஷேகம் பண்ணப்பட்ட காரியங்கள் அல்லது ஆட்களுக்காவது செய்யப்படும் விசேஷ அவசங்கையாம்.


2. அவபக்தி எதில் அடங்கியிருக்கிறது?

நாம் செய்ய வேண்டிய ஆராதனை முயற்சிகளைச் செய்யாமல் விட்டுவிடுவதில் அடங்கியிருக்கிறது.


3. அவபக்தியைச் சார்ந்த பாவங்கள் எத்தனை? 

ஆறு.  அவைகளாவன:

(1)  தேவ ஊழியத்தில் அசட்டைத்தனம்.

(2)  சர்வேசுரனைப் பரிசோதித்தல்.

(3)  தேவதுரோகம்.

(4)  சீமோனியம்.

(5)  தேவதூஷணம்.

(6)  பொய்ப் பிரமாணம்.


குறிப்பு: தேவதூஷணம், பொய்ப்பிரமாணம் இவ்விரண்டும் இரண்டாம் கற்பனை விளக்கத்தில் விவரித்துக் காட்டப்படும்.