வீட்டில் இருக்கும் நமக்கு ஜெபமாலையும், மனவல்ய ஜெபங்களுமே பாதுகாப்பு...

சில ஆலோசனைகள்..

கீழ்கண்ட எல்லாருக்கும் தெரிந்த மனவல்ய ஜெபங்களை அடிக்கடி நாம் உச்சரிப்போம்.. அதுவும் தேவையினிமித்தமாக வெளியே போகும்போதும்.. வரும்போதும்..

1. “பிதா சுதன் பரிசுத்த ஆயியின் பெயராலே- ஆமென் “

2. “ இயேசுவின் இரத்தம் ஜெயம் “

3. “இயேசு “ – இயேசுவின் திரு நாமமே ஒரு ஜெபம்தான் ஆகையால் அடிக்கடி உச்சரிப்போம்.. பயத்திலிருந்தும் நோயிலிருந்தும் நம்மைக் காப்பாற்றும்.

4. “மரியாயே வாழ்க ! “ ( இயேசுவின் பெயருக்கும் மரியாயின் பெயருக்கும் பிசாசு மட்டுமல்ல வைரஸும் தூர ஓடும்)

5.  “இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவே எங்கள் இருதயத்தை தேவரீருடைய இருதயத்திற்கு ஒத்ததாக செய்தருளும் “

6. “மரியாயின் மாசற்ற இருதயமே – எங்கள் இரட்சண்யமாயிரும்”

7. “இயேசு மரி சூசை உங்களை நேசிக்கிறோம் – ஆன்மாக்களைக் காப்பாற்றுங்கள்.

8.     காவல் சம்மனசு ஜெபத்தை அடிக்கடி சொல்லுங்கள்..

9.     சில பரலோக மந்திரங்கள், அருள் நிறை மந்திரங்களைச் சொல்லுங்கள் ( உதாரணமாக 1 பர 3 அருள் நிறை மந்திரங்கள்)

10.  அடிக்கடி நம் மேலும், நாம் சாப்பிடும் உணவின் மேலும் சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளுங்கள். நம்மை மீட்ட சிலுவை… மீட்பின் கருவி… நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றும் கருவி.. (சிலுவை ஜெபங்களையும் சொல்லலாம்.. “ திருச்சிலுவையே எங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும்” என்றும் சொல்லலாம்..

11.  “இயேசுவே என்னை இரட்சியும்”

12.  “ இயேசுவே என் நம்பிக்கிகையெல்லாம் உங்கள் பெயரில் வைக்கிறேன்”- இது மாதா சொல்லிக்கொடுத்த ஜெபம்.

13.  இயேசுவே… மரியே.. இயேசுவே.. மரியே...

14.  நமது பாதுகாவலர்களை, நமது பெயர் கொண்ட புனிதர்களை அடிக்கடி வேண்டிக்கொள்ள சொல்லுவோம்.. (உ.ம் புனித சந்தியாகப்பரே ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்)

15.  மிக்கேல் அதிதூதர் ஜெபத்தையும் ஜெபிப்போம்.. (அதி தூதரான அர்ச்சிஷ்ட்ட மிக்கேலே..)

16. “ இயேசுவின் மதுரமான திருஇருதயமே என் ஸ்நேகிதமாயிரும்”

17.  இயேசுவின் திருஇருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் ஜெபமும் செய்வோம்..

18.  இயேசுவின் திருஇருதயத்திற்கும், மாதாவின் மாசற்ற இருதயத்திற்கும், நம்மையும், நம் குடும்பங்களையும் அனுதினமும் ஒப்புக்கொடுப்போம்..

19.  ஆசை நன்மை அடிக்கடி வாங்குவோம்.. பாவசங்கீர்த்தன மந்திரத்தை தினமும் ஒருமுறையாவது சொல்வோம்.

20.   திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்கிய பின்னும், ஆசை நன்மை வாங்கிய பின்னும் கீழ்கண்ட ஜெபத்தை அடிக்கடி ஜெபித்தீர்கள் என்றால் பயம் நம்மை விட்டு முற்றிலுமாக விலகிவிடும்..  நம்பிக்கியும் சந்தோசமும் ஏற்படும்,

 “ ஆண்டவராகிய இயேசுவே ! எனக்கு எத்தகைய மரணத்தைத் தர தேவரீருக்கு சித்தமோ அந்த மரணத்தையும், அதன் அத்தனை வேதனைகளையும் இப்போதே உம் திருக்கரத்தில் இருந்து மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன் “

குறிப்பு : தினமும் குடும்ப ஜெபமாலையும், இயேசுவின் திருஇருதயத்திற்கு தங்கள் குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபமும் மிக மிக முக்கியம்.

மனவல்லிய ஜெபத்தில் முக்கியமான மூன்று...

“இயேசுவின் இரத்தம் ஜெயம்”  “ இயேசு “ மரியாயே வாழ்க”

மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு நம்மையும், நம் குடும்பத்தையும் அடிக்கடி ஜெபமாலையின் போது ஒப்புக்கொடுப்போம்.. அன்னையின் பாதுகாப்பு வளையமே மாதாவின் மாசற்ற இருதயம்தான்..

மாதாவின் மாசற்ற இருதயத்தின் பாதுகாப்பு, ஜெபமாலை, மாதா பக்தி என்பது நம்மையிம் நம் குடும்பத்தையும் தீய எதிரிகளிடமிருந்து பாதுகாத்து பத்திரமாக அவர் மகனும், நம் ஆண்டவருமான இயேசு சுவாமியின் பாதத்தில் சேர்ப்பதே ஆகும்..

ஆகையால் தயக்கமில்லாமல் நம் தாயிடம் தஞ்சம் புகுவோம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !