ஞான உபதேசம் - ஞான உபதேசம்

9. இந்த வேத விஷயங்களை அறிவதற்குச் செய்ய வேண்டியதென்ன?


கத்தோலிக்க திருச்சபையின் ஞானோபதேசத்தைப் படித்தறிய வேண்டியது.


1. ஞான உபதேசத்தைப் படித்து அறிவது பிரதான காரியமா?

சகல சாஸ்திரங்களிலும் ஞான சாஸ்திரமாகிற ஞான உபதேசம், மெய்யாகவே முக்கியமான சாஸ்திரம். ஏனெனில், ஞான உபதேசம் நாம் எதை விசுவசிக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், எவற்றை விலக்க வேண்டும் என்பதைக் கற்பித்து மோட்சத்துக்குப் போகும் வழியைக் காட்டுகிறது.


2. ஞான உபதேசத்தில் எத்தனை பாகம் உண்டு?

மூன்று பாகம் உண்டு. அவைகளாவன :

1- வது -- நாம் விசுவசிக்க வேண்டிய சத்தியங்களின் விளக்கம் என்னும் முதல் பாகம்.

2- வது -- நாம் அனுசரிக்க வேண்டிய பத்துக் கற்பனை, திருச்சபை கட்டளைகள், பாவம், புண்ணியம், பேறுபலன் ஆகிய இவைகளின் விவரம் என்னும் இரண்டாம் பாகம்.

3-வது -- நாம் அர்ச்சிக்கப்படுவதற்குரிய வழிமுறைகளாகிய செபம், தேவதிரவிய அனுமானம் முதலிய வேத அனுசரிப்புகளின் விளக்கம் என்னும் மூன்றாம் பாகம்.