நல்ல மரணம் அடைவதற்கான ஜெபம்

பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஏக சுதனுமாய், எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசுகிறீஸ்துவே! தேவரீர் சிலுவையிலே அறையுண்டிருக்கும்போது மகா கொடூர கஸ்தி வேதனைப்பட்டதுமல்லாமல், விசே­மாய் உமது திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரியும்போது சொல்லிலடங்காத வேதனையை அனுபவித்தீரே.  அந்தக் கஸ்தி நிர்ப் பந்தங்களை எல்லாம் பார்த்து, உமது திரு மரணத் திற்கு நான் பங்காளியாயிருக்கும்படி அடியேன் நல்ல மரணம் அடையக் கிருபை செய்தருளும் சுவாமி.  சேசுவே, உம்முடைய திருத் தாயாருக்கும், உமக்கும் நடுவிலிருந்து உமது அன்போடு ஆவி பிரிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பருக்குத் தேவரீர் கிருபை செய்தது போலவும், மகா பக்தி நேசத் தோடு சற்பிரசாதம் உட்கொண்டவுடனே அன்போடு உயிர்விட அர்ச்சியசிஷ்ட அமிர்தநாத ருக்கு அநுக்கிரகம் செய்தது போலவும், “சேசுவே, சேசுவே, சேசுவே!” என்று உயிர்விட அர்ச்சிய சிஷ்ட இஞ்ஞாசியாருக்கு இரக்கம் செய்தது போலவும், ஆவி பிரியுமளவும் துன்பமும் வேதனையும் அனுபவிப்பதால் அறிவு தடுமாறா திருந்து, அன்பின் முயற்சியில் உயிர் பிரிய அநேக மகாத்துமாக்களுக்கு அருள் செய்தது போலவும், பாவியாயிருக்கிற அடியேனுக்கு அப்படிப்பட்ட அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டைக் குறித்துக் கிருபை செய்தருளி, என் ஆவி பிரியு மளவும் உமது அன்பு அகலாதிருக்கவும், உமது அன்பிலே அடியேன் உயிர் விடவும் அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. ஆ என் சேசுவே! என் அன்பி லும், என் அன்போடும், என் அன்புக்காகவும், என் அன்பாலும் தேவரீர் உயிர்விடத் திருவுள மானதுபோல, அடியேனும், உமது அன்பிலும், உமது அன்போடும், உமது அன்புக்காகவும், உமது அன்பினாலும் உயிர்விட ஆசிக்கிறேன் சுவாமி.   ஆ என் அன்பே!  நிர்மலமான அன்பே, உன்னை இத்தனை அற்பமாய் சிநேகித்து இந்த அநீத உலகை விட்டு என்னைப் பிரித்து, உன்னை ஒரு போதும் அகலாது சிநேகிக்கும் அமல நாட்டில் சேர்த்தருள்வாயாக.   அர்ச்சியசிஷ்ட மரியாயே! சர்வேசுரனுடைய மாதாவே! உம்முடைய நேசத் திருக்குமாரன் சிலுவையில் அறைபட்டிருக்கும் போதும், அவருடைய திரு ஆத்துமம் திருச் சரீரத்தை விட்டுப் பிரியும் பொழுதும், தேவரீர் அடைந்த மட்டில்லாத துக்க வியாகுலத்தைப் பார்த்து, என் மரண சமயத்தில் என் பாவங்களை உமது கருணையால் மறைத்து, என் துர்க்குணங் களை உமது கிருபையால் நீக்கி, விசுவாசத்தில் உறுதியும், நம்பிக்கையில் திடமும், தேவ சிநேகத் தில் பெருக்கமும் கொண்டு, சத்துருவின் சோதனை யில் அகப்படாமல் ஜெயங்கொள்ளவும், உம்மோடுகூட உம்முடைய திருக்குமாரனை நித்திய காலமும் தரிசித்து சிநேகிக்கவும், எனக்காக விசே­மாய் அந்த ஆபத்தான சமயத்தில் மன்றாட வேண்டுமென்று மிகுந்த தாழ்ச்சி வினயத்தோடு உம்மை மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன்.

உலகத்தை ஜெயித்து, மோட்சத்தை அடைந்து உங்கள் இரட்சணியத்தின்மேலே கவலையற்று எங்கள் இரட்சணியத்தின்மேல் சிந்தையா யிருக்கும் அர்ச்சியசிஷ்டவர்களே!  ஆபத்து நிறைந்த இந்த உலகில் சத்துருக்கள் நடுவில் அகப் பட்டுத் தயங்கி நிற்கிற எனக்கு எப்போதும் அடைக்கலமாயிருக்கவும் உங்களை மன்றாடு கிறேன்.  மட்டில்லாத நன்மையை உங்களுக்குச் செய்தருளின சர்வேசுரனுடைய மட்டற்ற நன்மைத்தனத்தைக் குறித்து எனக்கு நல்ல மரணம் வரவும், நானும் உங்களோடு ஒருவனாயிருந்து நித்தமும் சர்வேசுரனுடைய நன்மைத்தனத்தை வாழ்த்தி ஸ்துதித்து வணங்கி நமஸ்கரிக்கவும், எனக்காகப் பரம கர்த்தராகிய அவரை வேண்டிக் கொள்ளுங்கள்.  

ஆமென்.