சிந்தாயாத்திரை மாதா பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜீவியர்களுடைய மாதாவாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரலோக ரோஜா நந்தவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்பினவர்களுக்கு ஞான ஜீவிய ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெயமடைவதற்குத் திருவிருதான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞானத்தின் சாயலான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெபத் தியானத்தின் திரு ஆலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அடைக்கலப் பேழையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்பினவர்களுக்குத் துணையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எருசலேமின் மகிமைக் கிரீடமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விடியற்காலத்தின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சந்திரனைப் போல நிறைந்த அழகுள்ளவர் களான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சூரியனைப் போலப் பிரகாசிக்கின்றவர் களாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சமுத்திரத்தின் நட்சத்திரமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல தீவினைகளிலேயும் நின்று எங்களை இரட்சிக்க மன்றாடுகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எரிந்தும் வேகாத முள்மரமாக மோயீசன் கண்ட திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாலமோன் என்கிறவருடைய பத்திராசன மான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தங்க மயமாய் இலங்கும் உப்பரிகையான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசித்திருக்கிறவர்களுடைய ஜீவனமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வேதம் அடங்கிய பெட்டகமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

முத்திரையிடப்பட்ட ஊற்றான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பஞ்சம் படை நோய்களிலே ஆதரவான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜீவியம் சுரக்கும் கிணறான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அலைகடலில் திசை தப்பித் தேறுதல் இல்லாமல் திகைப்பவர்களுக்கு நல்வழியும் கரை யுமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கப்பலேறித் தேசாந்திரியாயிருக்கிறவர்களைக் கைதூக்கி இரட்சித்துக் கொண்டு வருகிற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரதேசமாகிய இவ்வுலகமென்னும் பெருங் கடலில் நீந்தும் ஆத்துமாக்களுக்குப் பரலோகக் கரையைக் காண்பிக்கும் வெளிச்ச வீடாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஏழைகளுக்கு இரங்கும் தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிறவர் களுக்குத் தாயாரான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக் களுக்கு இளைப்பாற்றியான திவ்விய சிந்தா யாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பராபரனின் பூஜிதமுள்ள தேவாலயமான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

யாக்கோபு என்பவர் கண்ட ஏணியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல புண்ணியங்களுடையவும் ஞானக் கண்ணாடியான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சூரியனை ஆடையாகத் தரித்த பரம ஸ்திரீ யாகிய திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சந்திரனைப் பாதணியாய் அணிந்த தயாபரி யான திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஈராறு நட்சத்திரங்களைத் திருமுடியில் புனைந்த இராஜேஸ்வரியாகிய திவ்விய சிந்தா யாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தெய்வீகத்தின் ஞானச் சுடராய் விளங்குகின்ற திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை மன்றாடுகிறவர்களுக்கு அடைக்கல அன்னையான திவ்விய சிந்தாயாத்திரை  மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத் தக்கதாக, திவ்விய சிந்தாயாத்திரை மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

நித்திய பிதாவாகிய சர்வேசுரா, அர்ச்சிஷ்ட பரிசுத்த கன்னிமரியாயைக் குறித்து மன்றாடுகிற நாங்கள் அந்த உத்தம நாயகியின் வேண்டுதலினால் இந்தப் பரதேச யாத்திரையில் நேரிடும் சகல ஆபத்துக்களிலும் நின்று காக்கப்பட்டு, சத்திய சன்மார்க்கத்திலே தவறுதலின்றி நடந்து நன்மரணத்தையும் நித்திய மோட்சானந்த பாக்கியத்தையும் கண்டடைய அனுக்கிரகம் பண்ணியருளும்.  இந்த மன்றாட்டுக்களையயல் லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாத ருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும். 

ஆமென்.