ஏழு தவச் சங்கீதம்

(தாவீது என்கிற இராஜா பாடின சங்கீத ஆகமமான நூற்றைம்பது சங்கீதங்களில் ஏழு சங்கீதங்களைத் திருச்சபை தெரிந்தெடுத்துத் தவ செபமாக நியமித்ததினால் பாவத்தினிமித்தம் துக்க மனஸ்தாப முயற்சியாக அவைகளை உரைத்து வேண்டிக் கொள்வது பூர்வீகந் துவக்கி நடக்கின்ற நல்ல முறையாம்.)

1-வது. 6-ம் சங்கீதம்

(வியாதியஸ்தன் வைத்தியனை மன்றாடுகிறது போல, பாவத்தினால் மெலிந்து கலங்கின ஆத்துமமானது சர்வேசுரனைப் பிரார்த்தித்து அவருடைய சந்நிதியிலே அழுது பிரலாபிக்கிறதைக் குறித்தும், ஆண்டவர் அந்தப் பிரலாபத்தைக் கேட்பதைக் குறித்தும் பாடியிருக்கின்றது.)

சுவாமி!  தேவரீர் கோபமாயிருக்கும்போது என்னைத் தண்டியாதேயும் சுவாமி.  உமது கோபாக்கினி வேளையில் என்னை கடிந்து கொள்ளாதேயும்.

நானோ வெகு பலவீனன். என்மேல் இரக்க மாயிரும்.

என் எலும்புகள் நெக்கு விட்டிருப்பதால் எனக்கு ஆரோக்கியம் கொடுத்தருளும்.

என் ஆத்துமமோ வெகுவாய் கலங்கியிருக் கிறது.  ஆனால் சுவாமி! நீர் எந்த மட்டும் எனக்கு உதவி செய்யாமல் இருப்பீர்?

சுவாமி, தேவரீர் எனது முகமாய் திரும்பி என் ஆத்துமத்தை ஈடேற்றி உமது கிருபையைக் குறித்து என்னை இரட்சித்தருளும்.

ஏனென்றால் மரணத் தன்மையில் உம்மை யாரும் நினைப்பாரில்லை.  நரகத்தில் உம்மை ஸ்துதிக்கிறவனார்?

பிரலாபப்பட்டு மிகவும் மெலிந்தேன்.  இராத்திரி தோறும் என் கண்ணீரால் என் கட்டிலைக் கழுவி, என் கண்ணீரால் என் படுக் கையை நனைத்துக் கொண்டு வருகிறேன்.

கோபாக்கினையால் என் கண்கலங்கிச் சிவந்தது.  என் சகல சத்துருக்கள் நடுவில் வெகு நாளாய் அகப்பட்டுத் தளர்ந்தேன்.

ஆண்டவர் என் அழுகைக் குரலைக் கேட் டருளினார்; ஆகையால் அக்கிரமங்களைச் செய்கிற நீங்களெல்லாரும் என்னை விட்டு அகன்று போங்கள்.

ஆண்டவர் என் வேண்டுதலைக் கேட்டு எனது விண்ணப்பத்தைக் கையேற்றுக் கொண்டார்.  என் சத்துருக்களெல்லோரும் வெட்கி மிகவும் கலங்கக் கடவார்கள்.  அதிசீக்கிரத்தில் வெட்கமும் ஈனமும் மூடி பின்னிட்டு போகக் கடவார்கள்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


2-வது: 31-ம் சங்கீதம்.

(நல்ல மனதோடு பாவத்தை விட்டுச் சர்வேசுரனைச் சேருவதின் பேரிலும் ஆண்டவர் நமது இக்கட்டில் அடைக்கலமுமாய், நல்லோர்க்கு இன்பமுமாய், புல்லோர்க்கு துன்ப ஆக்கினை இடுபவருமாய் இருக்கிறார் என்றதின் பேரிலும் பாடியிருக்கின்றது.)

எவரெவர் பாவம் பொறுக்கப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.  எவரெவர் பாவம் மறைக்கப்பட்டதோ, அவர்களும் பாக்கிய வான்கள்.

ஆண்டவர் எவனுடைய பாவத்தை அவன் மேல் சாட்டாமலிருக்கிறாரோ, அவன் பாக்கிய வான்.  எவனுடைய மனதில் கபடமில்லையோ, அவனும் பாக்கியவான்.

நான் என் பாவத்தை வெளிப்படுத்தாமல் மவுனமாகி, நாளெல்லாங் கூக்குரலிட்டதினால் என் எலும்புகள் தளர்ந்து போயிற்று.

ஏனென்றால் உமது கைப்பாரம் அல்லும் பகலும் என்மேற் சுமந்ததினால் முள்ளு தைத்திறங்கினாற் போலக் கடின துயரப்பட்டு ஆறாட்டமாய்ப் புரண்டு கிடந்தேன்.

என் பாவத்தை உமக்கு அறிக்கையிட்டேன்.  என் அநீதத்தை உமக்கு மறைத்தேனில்லை.

நான் எனக்கு விரோதமாக என் அக்கிரமத்தை ஆண்டவரிடத்தில் சங்கீர்த்தனம் செய்வே னென்று சொல்லவே, நீர் என் பாவக் கேட்டைப் பரிகரித்தருளினீர்.

இதைப் பற்றித் தர்மாத்துமாக்களெல்லாரும் தக்க சமயம் பார்த்து உம்மை மன்றாடுவார்கள்.  இத்தன்மையாய் வெள்ள நீர் எப்படி புரண்டு வந்தாலும் அவர்கள் மட்டும் ஏறாது.

என்னைச் சூழ்ந்திருக்கிற துன்பங்களில் எனக் கடைக்கலமும் நீரே;  என் சந்தோ­மாகிய கர்த்தாவே, என்னை வளைத்துக்கொண்டிருக் கிறவர்களிடத்தில் நின்றென்னைக் காத்         தருளும்.

நடக்க வேண்டிய வழியை உனக்குக் கற்பித்து, உனக்கு உணர்வைத் தந்து, உன்மேல் நமது பார்வையை நிறுத்துவோம்.

ஞானமில்லாத குதிரை, கோவேறு கழுதை களைப்போல் இராதேயுங்கள்.  உங்களருகிற் சேராத அந்த மிருகங்களின் வாயை வாரினாலுங் கடிவாளங்களாலும் இறுக்கிக் கட்டுங்கள்.

பொல்லாதவர்களுக்கு அநேகம் ஆக்கினை கள் உண்டு.  ஆனால் ஆண்டவர் பேரில் பக்தி நம்பிக்கையாய் இருக்கிறவர்களை தேவ கிருபை சூழ்ந்திருக்கும்.

நீதிமான்களே, ஆண்டவரிடத்தில் அக மகிழ்ந்து சந்தோஷப்படுங்கள். செவ்விய இருதயத்தோரே, நீங்கள் எல்லாரும் அவரிடத்தில் உங்கள் மேன்மையைப் பாராட்டுங்கள்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


3-வது.  37-ம் சங்கீதம்.

(பாவத்தால் ஆத்துமத்தில் பட்ட புண்களைத் தெளிவிக்கிறதின்மேலும், நல்லோர் துன்பப்படுகையில் சிநேகிதராலும் கைவிடப்படுகிறதின் மேலும், தபசுக்குட்பட்ட ஆத்துமமானது சர்வேசுரனுடைய நீதிக்கு உத்தரிப்பதற்காக வழிபாடாக இலெளகீகத் துன்பங்களைக் கையேற்றுக் கொண்டு அநுபவிக்க எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறதின் மேலும் பாடியிருக்கின்றது.)

சுவாமி, தேவரீர் கோபமாயிருக்கும்போது என்னைத் தண்டியாதேயும்.  உமது கோபாக்கினி வேளையில் என்னைக் கடிந்து கொள்ளாதேயும்.

ஏனெனில் நீர் விட்ட அம்புகள் என்னை ஊடுருவிப் பாய்ந்தன, உமது கையின் பாரம் என்மேல் சுமந்தது.

உமது கோபத்தின் முகத்தே எனது மாம்சத்தில் சுகமற்றுப் போயிற்று, என் பாவங்களின் முகத்தே என் எலும்புகள் உருவற்றுக் கலகலத்துப் போயின.

ஏனென்றால் என் அக்கிரமங்கள் என் தலைக்கு மிஞ்சி என்னை மூழ்கடித்தும் வெகு பாரச் சுமையாக என்னை இருத்தியும் போட்டது; என் மதியீனத்தினால் என்னுடைய காயங்கள் புழுத்து, நாறிப் போயிற்று.

நான் மிகவுந் தரித்திரனாய் உடல் கூனிப் போய் நாள்முழுதும் துக்கத்தால் முகம் வாடித் திரிகிறேன். ஏனெனில் என் இடுப்பானது அக்கினிப் பிரவேசமாய் பற்றியயரிகிறது.  என் சரீரத்தில் நல்ல சதை எங்குமில்லை.

நான் வெகு வேதனைக்கும் ஈனத்துக்கும் உள்ளானேன்.  என் இருதயத்தின் அங்கலாய்ப் பினால் புலம்புகிறேன்.  என் ஆண்டவரே, என் ஆசைகளெல்லாம் உமக்குத் தெரிந்திருக்கிறது.  என் பிரலாபம் உமக்கு மறைந்திருக்கவில்லை.

என் இருதயம் கலங்கி என் சத்துவம் என்னைக் கைவிடுகிறது. என் கண்ணொளி மங்கிப் போகி றது.  என்னைச் சேர்ந்தார் சிநேகிதரும் என்மேல் எதிர்த்து நெருக்கி விரோதமாக நின்றார்கள்.

என்னருகில் இருந்தவர்கள் அகலப் போனார்கள். என் உயிர் பறிக்க எண்ணினவர்கள் எனக்கு வெகு கொடுமை செய்தார்கள்.

எனக்கு பொல்லாங்கு தேடினவர்கள் என் னோடு வீண்வார்த்தை பேசி, நாள் முழுதும் என்னை மோசம் போக்கும் விதத்தை யோசித் தார்கள்.

நானோவென்றால், காதுகேளாத செவிடனைப் போலவும், வாய் திறவாத ஊமையைப் போலவும் இருந்தேன். நான் கேட்கச் செவியில்லாதவனும், மறுத்துச் சொல்ல நாவில்லாதவனும் ஆனேன்.

சுவாமி, உம்மை நம்பியிருக்கிறேன்.  என் சர்வேசுரா சுவாமி, என் மன்றாட்டைக் கேட் டருளும்.

என் கால் தடுமாறும்போது என் மேல் இடும்பு பேசின என் சத்துருக்கள் இன்னும் என்னைக் கண்டு மனமகிழாதபடி உம்மைக் கேட்டுக் கொண்டேன்.  ஆகிலும் நான் தண்டனைப்பட ஆயத்தமாயிருக்கிறேன். என் சஞ்சலம் எந்நேரமும் என் முன்பாக நிற்கிறது.

ஏனெனில் என் அக்கிரமங்களைச் சொல்லிக் காட்டுவேன். என் பாவங்களை நினைத்து சிந்தைப் படுவேன்.  ஆனால் என் சத்துருக்கள் உயிரோ டிருந்து என்னிலும் பலமானார்கள்.

நியாயமில்லாதென்னைப் பகைக்கிறவர்கள் பலுகிப்போனார்கள்.  நான் நன்மையைப் பின் சென்றதால் நன்மைக்குப் பதில் தின்மை செய்கிற வர்கள் என்னைத் தூற்றுகிறார்கள்.

என் சர்வேசுரா சுவாமி, என்னைக் கைவிடா தேயும்; என்னை விட்டு அகலாதேயும்.  எனக்கு இரட்சணியமாயிருக்கிற சர்வேசுரா சுவாமி, தீவிரத்தில் வந்து எனக்கு உதவி செய்தருளும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


4-வது. 50-ம் சங்கீதம்.

(தாவீது இராஜா தமது கண்முன்பாக எப்பொழுதும் இருக்கிற தமது பாவங்களைக் குறித்துச் சர்வேசுரனை நோக்கிப் பிரலாபித்துப் பாவத்தில் நின்று அதிகமதிகமாய்த் தம்மைப் பரிசுத்தமாக்கித் தமக்கு வரப்பிரசாதங்களையும் புதிதான இருதயத்தையும் கொடுத்தருள வேணுமென்று சர்வேசுரனை மன்றாடினதும், தாழ்ச்சியும் மனஸ்தாபமுமுள்ள இருதயமே சர்வேசுரனுக்குப் பிரிய பலி என்கிறதுமாகப் பாடியிருக்கிறது.)

சர்வேசுரா சுவாமி, உமது தயையின் விசாலத்திற்குச் சரியானபடி என்மேல் இரக்கமாயிரும்.  உமது இரக்கப் பெருக்கத்துக்கு ஒத்தபடி என் அக்கிரமங்களை நிர்மூலமாக்கும்.

இன்னும் அதிகமாய் என் குற்றங்களில் நின்று என்னைக் கழுவி, என் பாவங்களில் நின்று என்னை விடுவித்துப் பரிசுத்தப்படுத்தும்.

நானோ எனது அக்கிரமங்களை அறிந்திருக் கிறேன்.  என் பாவம் எந்நேரமும் என் கண்முன்னே நிற்கிறது.

உமக்கு மாத்திரமே குற்றஞ்செய்தேன்; உம் முடைய சந்நிதிக்கு முன்னே தீங்கு புரிந்தேன்; நீர் உமது வாக்குத்தத்தத்தில் பிரமாணிக்கராய் இருக் கிறீரென்றும், உமது தீர்வையிலே நீதிபரராயிருக் கிறீரென்றும் விளங்கும்படி என் குற்றங்களைப் பொறுத்தருளும்.

நானோவென்றால், அக்கிரமத்தில் சென்மித்தேன்; என் தாயார் பாவத்தில் என்னைக் கர்ப்பந் தரித்தாள்.  

நீர் சத்தியத்தை நேசித்து உமது பரம ஞானத்தின் மறைவுள்ள இரகசியங்களை எனக்கு விளங்கச் செய்தருளினீர்.  

நீர் ஈசோப்பென்கிற புல்லினால் என்மேல் தெளித்தருளுவீர்; நானும் சுத்தமாவேன். நீர் என்னைக் கழுவுவீர்; வெண் பனிக்கட்டியிலுந் தூய்மையாவேன்.

என் செவிகளுக்கு இன்பத்தையும் சந்தோஷத் தையுந் தந்தருளுவீர். தளர்ந்துபோன என் எலும்புகள் திடன்கொண்டு எழுந்து அக்களிக்கும்.

என் பாவங்களைப் பாராமல் உமது முகத்தைத் திருப்பி என் அக்கிரமங்களையயல்லாம் போக்கியருளும்.

சர்வேசுரா, என்னிடத்தில் சுத்தமான இருத யத்தை உண்டாக்கி என் உள்ளத்தில் நீதி முறை யுள்ள புத்தியைப் புதுப்பித்தருளும்.

உமது சந்நிதியில் நின்று என்னைத் தள்ளாதே யும். உம்முடைய இஸ்பிரீத்துசாந்துவை என்னிடத் தில் நின்று மறுபடி வாங்கிக் கொள்ளாதேயும்.

உமது இரட்சணியத்தின் ஆனந்தத்தை மறுபடி எனக்குத் தந்தருளும்; உமது மேலான ஞானத்தால் என்னை உறுதிப்படுத்தும். அநீத ருக்கு உமது மார்க்கத்தைப் போதிப்பேன்.  துஷ்டர் உம்மிடத்தில் திரும்புவார்கள்.

சர்வேசுரா, என் இரட்சகரான சர்வேசுரா, இரத்தப் பழிகளில் நின்று என்னை மீட்டு விடுதலை யாக்கியருளும்; அப்போது என் நாவானது உமது நீதியை புகழ்ந்தேத்தும்.

ஆண்டவரே! என் இதழ்களைத் திறந்தருளும்.  என் வாய் உம்முடைய தோத்திரங்களை எடுத்துக் கூறும்.

ஆண்டவரே! உமக்குப் பலி வேண்டியிருந்தால் மெய்யாகவே பலி கொடுப்பேன்; ஆனால் சர்வாங்க தகன பலிகள் உமக்குப் பிரியமாயிருக்கிறதில்லை.

துக்கப்படுகிற உள்ளமே ஆண்டவருக்குப் பிரியமான பலி.  மனஸ்தாபத்தினாலே நொறுங் கித் தாழ்ச்சியுள்ள இருதயத்தைப் புறக்கணிக்க மாட்டீரே சுவாமி.

ஆண்டவரே!  உமது நன்மைத்தன்மையில் சீயோன் என்ற பர்வதத்தின் மேல் கிருபையா யிரும்; ஜெருசலேமென்கிற பட்டணத்தின் மதில்கள் எடுக்கப்பட தயை செய்தருளும்.

அப்பொழுது நீதியின் பலியும், சர்வாங்க தகனப் பலியும் காணிக்கைகளும் உமக்கு ஏற்கை யாகும். அப்பொழுதே உமது பீடத்தின் மேல் நவ சுகாரியப் பலிகளைக் கொடுப்பார்கள்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


5-வது.  101-ம் சங்கீதம்.

(இந்த சங்கீதம் தீர்க்கதரிசியாகிய தாவீது இராஜாவைப்போல் அவரவர் தங்கள் தங்கள் பாவத்தின்மேல் மனஸ்தாபப்பட்டு பாவத்தின் ஆக்கினையாகிய துன்பங்களில் சர்வேசுரனை மன்றாடுகிறதற்கு மகா உதவியுமாய்   திருச்சபைக்கு மகா உச்சிதமான செபமுமாய் பாடியிருக்கின்றது.)

ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்.  என் அபயசத்தம் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

எனக்கு உமது திருமுகத்தைத் திருப்பிக்கொள்ளாதேயும்; நான் துன்பப்படும் எந்தெந்த நாளிலும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்துக் கொடுத்தருளும்.

நான் எந்தெந்த நாளில் உம்மை மன்றாடி னாலும் என் மன்றாட்டைத் தீவிரமாய்க் கேட் டருளும். ஏனெனில் என்னுடைய நாட்கள் புகை போல் மறைந்து போயிற்று.

என் எலும்புகள் அடுப்பின் விறகைப் போல துவண்டு போயிற்று.  என் ஆகாரத்தைப் புசிக்க மறந்துவிட்டதினால் என் இருதயங் காய்ந்து வெயி லில் அடிபட்ட புல்லைப் போல் உலர்ந்தேன்.

என் பிரலாபப் பெருமூச்சின் பேரொலியால் எனது தோலோடு என் அஸ்திகள் ஒட்டிப் போயிற்று.

வனாந்தரத்தில் தனித்திருக்கும் பெலிக்கான் போலவும் தனி வனத்தில் தங்கின ஆந்தை போலவுமானேன். கண்ணுறக்கமற்றேன்.  தனிப் பட்டுக் கூரைமேல் அமர்ந்த குருவிபோல் ஆனேன்.

என் சத்துருக்கள் என்னை நாள் முழுவதும் தூ­ணம் சொல்கிறார்கள்.  என்னைப் புகழ்ந் தவர்கள் எனக்கு எதிராய்ச் சபதம் கூறுகிறார்கள்.

அதேனென்றால், சாப்பாடாகச் சாம்பலை அருந்தி தண்ணீரோடு என் கண்ணீரைப் பானம் பண்ணினேன்.  உமது சினத்தையும் கோபாக் கினையையும் பற்றி இவ்விதம் செய்தேன்.

ஏனென்றால், நீர் என்னை உயர்த்திப் பின்பு கீழே விழ அடித்து நொறுக்கினீர்.  என்னுடைய நாட்கள் நிழலைப் போல் சாய்ந்து போயிற்று;  நானோ புல்லைப்போல் உலர்ந்தேன்.

ஆனால் ஆண்டவரே!  நீர் சதாகாலங்களும் இருக்கின்றவர்; உமது திருநாமத்தின் ஸ்மரண மோவெனில் அநவரத காலமும் நிலைத்து நிற்கும்.

சீயோன் என்ற மாநகருக்குக் கிருபை புரியும் காலம் வந்து நேரிட்டமையால் தேவரீர் எழுந் தருளி அதன்மேல் இரக்கம் செய்தருளும்.

அதேனென்றால் உம்முடைய அடியார் அந்த நகரத்தின் தகர்ந்த கற்களின்மேல் பிரியமாகி, அதன் மண்ணின்மேலும் இரக்கமானார்கள்.

ஆண்டவரே!  சகல சனங்களும் உமது திரு நாமத்துக்கும், சமஸ்த மண்டலேஸ்வரரும் உமது அர்ச்சிய மகிமைக்கும் அஞ்சுவார்கள்.

அதேதெனில், சீயோன் என்ற நகரத்தை ஆண்டவர் கட்டுவித்த தமது மகிமைப் பிரதாபத் திற் காணப்படுவார்.  அவர் தாழ்ச்சி உள்ளவர் களுடைய வேண்டுதலுக்குத் திரும்பிச் செவி தந்ததல்லாமல் அவர்களுடைய மன்றாட்டைப் புறக்கணித்ததில்லை.

இனிவரும் சந்ததிக்கு இவைகள் எழுதப் பட்டிருக்கும்;  இனிமேல் உண்டாகும் ஜனம் ஆண்டவரை ஸ்துதிக்கும்.

ஏனென்றால், ஆண்டவர் தமது அர்ச்சிய சிஷ்டதனத்தின் உன்னதத்திலிருந்து திருக்கண் ணோக்கினார். விலங்கில் கிடக்கிறவர்களுடைய பிரலாபத்தைக் கேட்கவும் கொலையுண்டு போனவர்களுடைய பிள்ளைகளைக் கட்டவிழ்த்து விடுவிக்கவுமே.

இப்படி விடுதலையான ஜனங்களும் இராஜாக்களும் ஆண்டவருக்குத் திருப்பணி புரியக்கூடும்பொழுது சீயோன் பட்டணத்தில் ஆண்டவருடைய திருநாமத்தைக் கொண்டாடி ஜெருசலேம் நகரில் அவருடைய திருப்புகழைப் பாடத்தக்கதாகவும் பரலோகத்தில் நின்று பூலோகத்தைப் பார்த்தருளினார்.

அடியான் தன் சத்துவத்தின் மத்தியில் அவருக்குச் சொன்னதாவது: என் ஆயுசினுடைய சொற்பத்தை எனக்குக் காட்டியருளும்.  என் ஆயுள் நடுவில் என்னை அழைத்துக் கொள்ளா தேயும். உம்முடைய வரு­ங்கள் தலைமுறை தலைமுறையாக நிற்கின்றது.

சுவாமி! தேவரீர் தாமே ஆதியிலே பூமண்டலத்துக்கு அஸ்திவாரமிட்டீர்.  வான மண்டலங்கள் உமது கைத்தொழிலாமே.

இவைகள் சிதைந்துபோம்; நீரோ நிரந்தரம் இருக்கிறவராமே.

உடுத்திய உடைபோல இவையயல்லாம் பழசாய்ப்போம்;  ஆடைமாற்றுகிறது போலத் தேவரீர் அவைகளை மாற்றுவீர்; அவைகளும் மாறுபட்டுப் போம்.

நீரோவெனில் எக்காலமும் ஒரே சீராயிருக் கிறவர். உம்முடைய வரு­ங்கள் ஒழிவதில்லை.

உம்முடைய அடியார்களின் பிள்ளைகள் உம்மோடு வாசஞ்செய்வார்கள். அவர்களுடைய சந்ததியும் என்றென்றும் நன்னெறியில் நடத்தப் படுவதாமே.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


6-வது. 129-ம் சங்கீதம்.

(பாவப் பொறுத்தல் அடைய சர்வேசுரனை மன்றாட உருக்கத்தின் மாதிரிகையாகப் பாடி யிருக்கின்றது.)

சுவாமி பாதாளத்தில் நின்று உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சுவாமி!  என் சத்தத்தைக் கேட்டருளும்.  எனது விண்ணப்பத்தின் பேரொலியை உமது செவிதந்து கேட்டருளும்.  ஆண்டவரே! நீர் எங்கள் பாவங்களைப் பாராட்டுவீராகில் உமக்கு முன்பாக நிருவாகம் செய்கிறவனார்?

ஆனால் தேவரீரிடத்தில் தயாளமான மன்னிப் பிருக்கிறபடியாலும், உமது வேத முறைமையைப் பற்றியும் சுவாமி உம்மை நம்பிக் காத்திருக்கிறேன்.

என் ஆத்துமம் ஆண்டவருடைய திருவசனத்தின்மேல் ஊன்றிக் காத்திருக்கின்றது.  என் ஆத்துமம் ஆண்டவரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது.

உதய சாமக்காவல் நேரந்துவக்கி இரவு பரியந்தம் இஸ்ராயேல் ஜனம் ஆண்டவரை நம்பிக் காத்திருக்கக்கடவது.  ஏனென்றால், சுவாமி தயையுள்ளவர்; அவரிடத்தில் இரட்சணியம் ஏராளமாய் இருக்கின்றது.

அவரே இஸ்ராயேல் ஜனத்தை அதன் சகல பாவங்களில் நின்று இரட்சித்தருளுவார்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


7-வது. 142-ம் சங்கீதம்.

(தீர்க்கதரிசியாகிய தாவீது இராஜா, தாம் படுகிற உபத்திரவங்களில் தேவ கிருபையை இரந்து கேட்டு சர்வேசுரன் தமது நீதியின் உக்கிரத்துக்கு ஒத்த வண்ணம் நடப்பியாமல் தயையோடு நடப்பித்தருள வேணுமென்று சர்வேசுரனை மன்றாடிப் பாடியிருக்கின்றார்.)

சுவாமி! என் வேண்டுதலைக் கேட்டருளும். உமது சத்தியத்தின்படி என் விண்ணப்பத்திற்குக் காது கொடுத்தருளும்.

உமது நீதியின்படி என் மன்றாட்டை ஏற்றுக் கொள்ளும்.  குற்றம் பாராட்டி உம்முடைய அடியானைத் தீர்வையிடப் பிரவேசியாதேயும்.

ஏனெனில் சீவனுள்ளவரில் எவனும் உமக்கு முன்பாக பரிசுத்தனாகத் தோன்ற மாட்டான்.

என் சத்துராதி என் ஆத்துமத்தை உபத்திரவப் படுத்தி என்னுயிரை வதைத்துப் பூமியில் சிறுமைப்படுத்தினான்.

முற்காலத்தில் மாண்டு போனவர்களைப் போல என் சத்துரு என்னை இருட்டில் குடிகொண் டிருக்கச் செய்தான்.  என்னைக் குறித்து என் புத்தி அமைந்து துக்கத்தில் அமிழ்ந்தி, என் இருதயம் கலங்கிப் போயிற்று.

நான் பூர்வகாலங்களை நினைத்து உமது செய லெல்லாம் யோசித்து எண்ணினேன்; உம்முடைய திருக்கரங்களின் செய்கைகளின் மேல் தியானம் செய்தேன். உம்மை நோக்கி என் கைகளை விரித்தேன்.

நீரில்லா நிலம் போல் என் ஆத்துமம் வறண்டு உம்மை நோக்கித் தாவுகிறது.  ஆண்டவரே!  என் ஆவி சோர்ந்து போகின்றது.  என் வேண்டுதலைத் தீவிரமாய்க் கேட்டருளும்.

உமது திருமுகத்தைத் திருப்பிக் கொள்ளா தேயும்; திருப்பிக் கொள்வீராகில் குழியிலிறங்கிப் போகிறவர்களுக்குச் சமானமாவேன்.

நான் உம்மை நம்பியிருக்கின்றமையால் அதிகாலமே நான் உமது தயை மொழியைக் கேட்கச் செய்தருளும்.

என் ஆத்துமம் உம்மை நோக்கி எழுந்தபடி யால், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குப் படிப்பித்தருளும்.

நான் உம்மைத் தஞ்சமென்று ஓடி வந்த தினால், சத்துருக்களிடத்தில் நின்று என்னைத் தற்காத்தருளும்.  தேவரீர் என் தேவனாகையால், நான் உமது சித்தத்தின்படியே செல்லக் கற்பித் தருளும்.

உம்முடைய நல்ல இஸ்பிரீத்துவானவர் என்னை நன்மார்க்கத்திலே நடப்பிப்பாராக;  சுவாமி, உமது திருநாமத்தின் கீர்த்தியைக் குறித்து உமது நீதிக்கு ஒத்தபடி என்னைச் சீவிக்கச் செய்வீராக.

உபத்திரவத்திலே நின்று என் ஆத்துமத்தை விடுதலையாக்கி உமது தயவினால் என் சத்துருக் களைச் சங்கரித்துப் போடுவீராக.  நான் உம் முடைய அடியானாதலால் என் ஆத்துமத்தை உபாதிக்கிறவர்கள் எல்லோரையும் நிர்மூலஞ் செய்தருளும்.

சுவாமி!  எங்கள் பாவங்களையும் எங்களை ஈன்றவர்களுடைய பாவங்களையும் நினையா  தேயும்.  எங்கள் பாவங்களுக்காகப் பழிவாங்கத் திருவுளமாகாதேயும்.

பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது.

தமது விலைமதியாத திரு இரத்தத்தால் நம்மை மீட்டு இரட்சித்த சேசுநாதருக்கு அநவரத காலமும் ஸ்தோத்திரமும் ஸ்துதியும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

ஆமென்.